*
http://www.thehindu.com/opinion/op-ed/seeking-allah-in-the-midlands/article4743582.ece
SEEKING ALLAH IN THE MIDLANDS ....
OF THE THOUSANDS OF WHITE BRITONS EMBRACING ISLAM EVERY YEAR, MOST ARE THOUGHT TO BE PROFSSIONALLY SUCCESSFUL, INDEPENDENT-MINDED WOMEN, SAYS A STUDY.
* ஏறத்தாழ ஆண்டு தோறும் 50,000 ஆங்கிலேயப் பெண்கள் இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார்கள்.
* 9/11க்குப் பிறகு அதிக பெண்கள் இஸ்லாமிற்கு மாறி வருகிறார்கள்.
* இஸ்லாமிய ஆண்களைத் திருமணம் செய்வதன் மூலமாகவும் நிறைய பெண்கள் இஸ்லாமிற்கு வருகிறார்கள்.
* மதம் மாறிய பெண்களுக்கு எதிராக அவர்களது குடும்பம், நண்பர்கள், சமூகம் நிற்பது சாதாரணம்.
* மதம் மாறிய பெண்களும் பிரிட்டனில் இயங்கி வரும் ஷாரியத் பெண்களுக்கு எதிராக இயங்கி வருவதாகக் கூறுகிறார்கள்.
மத மாற்றம் பற்றி பொதுவாக எனக்குப் பல கருத்துகள் உண்டு. தன் மதமும் புரியாமல், பாதி மட்டும் அறிந்து அடுத்த மதத்திற்குப் போகும் பலரைப் பார்த்துள்ளேன். அல்லது, தனக்குக் கிடைத்த ஏதோ ஒரு நன்மையை வைத்து அடுத்த மதத்திற்கு சென்றவர்கள் நிறைய பேரை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொல்லப்பட்டவர்களை அந்த அட்டவணையில் சேர்க்க விரும்பவில்லை.
இஸ்லாம் பற்றி அதிகமாகத் தெரியாத நிலையில் இருந்த போது என்னிடமிருந்த எண்ணங்கள் அந்த மதக் கொள்கைகளை அறிந்த பின் அம்மதத்திற்கு மிகவும் எதிராகத் திரும்பின. . மாற்று மதங்கள் மீது இஸ்லாமிற்கு இருக்கும் ‘கோபமும்,’ எதிர்ப்பும் மிக அதிகம். அந்த வெறுப்புணர்வு அச்சத்தைத் தந்தது.
அதோடு, மற்ற மதங்களிலிருர்ந்து இஸ்லாமிற்குள் நுழைபவர்கள், அதன் பின் அப்படி மதம் மாறும் தங்கள் உரிமையை முற்றிலும் இழந்து விடுகிறார்கள்.இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த ஒரு சட்டம் இருப்பது தெரிந்தாலே அம்மதத்தின் மீது மரியாதைக்குப் பதில் பயம் தானே வரும் என்பது என் எண்ணம்.
எப்படியோ ... பலர் இஸ்லாமிற்குள் வருகிறார்கள். இனியாவது ஆர்ம்ஸ்ட்ராங்க் .. மைக்கிள் ஜாக்சன் .. பதிவியைத் துறந்த போப் .. எல்லோரும் இஸ்லாமியர்களாக மாறி விட்டார்கள் என்பது போன்ற இஸ்லாமியரின் வழக்கமானப் பிரச்சாரத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது.
இக்கருத்து தினசரியில் வந்த அடுத்த நாள் மூன்று இஸ்லாமியரின் கடிதங்கள் Letters to the Editor-க்கு வந்தது. அது ஒன்றும் ஆச்சரியமில்லை!
*****************************
http://articles.timesofindia.indiatimes.com/2013-05-24/uk/39500802_1_woolwich-muslim-communities-riot-police
நட்ட நடுத் தெருவில், பட்டப் பகலில் ஆங்கிலேய சிப்பாய் ஒருவரை இரு இஸ்லாமியர் பலர் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்கள். இந்த கொலையில் சம்பந்த்தப்பட்ட இரு நைஜீரியர்களும் கிறித்துவத்திலிருந்து இஸ்லாமிற்கு சமீபத்தில் மதம் மாறியவர்கள். இவர்களது வெறிச் செயலை //It was also a betrayal of Islam - and of Muslim communities who give so much to our country.// - என்கிறார் ஆங்கிலேயப் பிரதமர்.
கொலையாளிகள் ஒருவனான Adebolajo banned Islamist organization Al Muhajiroun which promotes Sharia law-ல் சேர்ந்து, பின் விலகி,. இன்னொரு militant Islamist group Al Shabaab in Somalia-ல் சென்ற ஆண்டு சேர்ந்துள்ளான்.
இஸ்லாமில் சேருவதோடு நின்று விட்டால் பரவாயில்லை போலும். ஏனெனில் பல்வேறு உருவத்தோடு வளர்ந்து வரும் இஸ்லாமிய குழுக்கள் இவ்வாறு வல்லினத்தை வளர்த்து விடுகின்றன.
இந்த இரு கொலைகாரர்களும் அப்படை வீரனைக் கழுத்தை அறுத்துக் கொல்லும் போது ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தினார்கள். கழுத்தை அறுக்கும் போது ஏன் அல்லாஹூ அக்பர் என்று கத்துகிறார்கள் என்று முன்பே கேட்டிருந்தேன். பல கேள்விகளுக்குப் பதிலில்லாதது போல்இக்கேள்விக்கும் சகோக்கள் யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை.
இச்செயலை எதிர்த்து எந்த இஸ்லாமியரும் அத்தினசரிக்கு எக்கடிதமும் அடுத்த நாள் எழுதியதாக நான் பார்க்கவில்லை.
********************
*