Quantcast
Channel: தருமி (SAM)
Viewing all articles
Browse latest Browse all 777

660. சின்னச் சின்ன கேள்விகள்

$
0
0






*



நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள் என்றாலே ’நல்ல குடிமக்கள்’ எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ? எனக்கு எப்போதும் அப்படித் தோன்றியதே இல்லை. அவர்கள் மேல் மரியாதை எப்போதும் எனக்கு உண்டு. இது தவறா?

ஆனால் எப்போதும் அவர்கள் மீது எனக்கு ஒரு கோபமும் உண்டு.அவர்களின் போராட்டங்களில் யாராவது அப்பாவி போலீஸ்காரர், காவல் துறை அவுட்போஸ்டுகள், பாவப்பட்ட மக்கள் சிலர், அதிகமாகப் போனால் நில பொறியாளர்கள் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரையாவது கடத்திப் போவது, சிரமப் படுத்துவது, கொலையும் செய்து விடுவது என்பது போன்றவைகளைச் செய்யும் போது எனக்குக் கோபம் வருவதுண்டு. எய்தவனிருக்க ஏன் இவர்கள் அம்பை நோகச்செய்கிறார்கள் என்று.

சமீபத்தில் நடந்த சட்டிஸ்கார் போராட்டத்தில் சல்வார் ஜுடூம் நிறுவனர் மகேந்திர கர்மாகொல்லப்பட்டிருக்கிறார். வருத்தம் ஏதும் வரவில்லை.
நல்ல “கர்மா” ! பார்த்தாலே
நல்ல தலைவர் மாதிரி இருக்கார்ல ...?
இவர் உருவாக்கிய ’படை’ அத்துணை மாபெரும் செயல்களை இதுவரை நடத்தியிருக்கிறது. பஸ்கார் பழங்குடியாராக இருந்தும் குடி கெடுத்துள்ளார். பல கொள்ளைகள்; கொடுமைகள்; தீ எரிப்புகள். பெரும் கம்பெனிகளுக்காக நம் நாட்டு சொத்தை,அங்கு வாழும் மக்களின் சொத்தை ஒன்றிரண்டு கம்பெனிக்களுக்கு வாரிக் கொடுக்க எப்படித்தான் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், நம்மையாளும் மன்மோகன்களுக்கும், சிதம்பரத்திற்கும் ஆசை வருமோ தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருப்பதே இல்லையோ? 

நக்சல்பாரிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் அந்த மனசாட்சி இருப்பது பார்த்து மகிழ்ச்சி. எப்போதும் அம்பு எய்தவனை விட்டு அம்பின் மேல் கோபப்படும் புரட்சியாளர்களின் குறி இம்முறை சரியாக எய்துள்ளது. இப்படி சரியான ஆட்களைக் கொன்றால் தான் மன்மோகன் வகையறாக்களுக்கும் சிதம்பரங்களுக்கும் புத்தி வருமென்றால் அதுவே நல்ல வழிதான்.

ஆனால் பணத்தின் பின்னாலும் அதிகாரத்தின் பின்னாலும் ஓடும் நாய்களுக்கு நல்ல புத்தி இதனால் வந்து விடுமா என்பதும் ஒரு பெரிய கேள்வி.

*****************************

சமீபத்தில் மதுரையில் கட்டுப்பாட்டை மீறி கட்டப்படும் பல கட்டிடங்கள் மதுரை கலெக்டரால் மூடப்பட்டது. அன்சுல் மிஸ்ரா நல்ல கலெக்டர். பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். வாழி ...

ஆனாலும் இது போன்ற நல்ல அதிகாரிகளை நல்ல அதிகாரிகளாக எப்பொழுதும் இருக்க நமது அரசு இயந்திரங்கள் விடாது போலும். சென்ற கலெக்டர் சகாயம் சில நல்ல வழிகளை ஆரம்பித்தார். கல் குவாரிக் கொள்ளையைத் தடுக்க முதல் படியை அவர் எடுத்தார். அடுத்து வந்த மிஸ்ராவும் அதைத் தொடர்ந்தார். நீதி மன்றத்திற்கு வழக்கு போனது. சின்னாள் குவாரிக்காரர்கள் கைகள் முடக்கப்பட்டன. சில நாட்கள் போனதும் அவர்கள் ‘மீண்டும் கடை விரித்தாயிற்று’!

நம் நீதி மன்றங்களின் வேலையே இது தான் என நினைக்கிறேன். குற்றவாளி என்று ஒரு அரசியல் வாதியையோ நீதி மன்றத்திற்குக் கொண்டு வந்ததும் நம் நீதியரசர்களுக்கு எல்லாவித ‘நல்ல குணங்களும்’ மறுபடியும் பிறந்து பெருக்கெடுத்து ஓடும். குற்றவாளிகளை விட்டு விடுவார்கள். பிறகு நல்ல அதிகாரிகள் எப்படி நல்ல அதிகாரிகளாக இருக்க முடியும்.

பழைய வழக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. டான்ஸி வழக்கு. நீதிபதி கடைசியில் குற்றவாளி தவறு செய்திருக்கிறார். அவர் அதை நினைத்து வருத்தப்பட்டாலே அது போதும் என்று நினைத்து தீர்ப்பையளித்தார்.

இப்போது பிக் பசார் கடை ஒன்றையும் மிஸ்ரா பூட்டி விட்டார். வண்டி நிறுத்த இடம் கொடுக்காமல் அந்தக் கட்டிடத்தைக் கட்டிமுடித்திருக்கிறார்கள். இதனால் அது தவறென்று கடை இழுத்துச் சாத்தப்பட்டது. ஓரிரு நாட்கள் தான். இப்போது கடை வழக்கம்போல் தன் பிசினசைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், கட்டிடக்காரர்கள் நீதிமன்றம் சென்று ‘ஸ்டே’ வாங்கி விட்டார்களாம். என்னப்பா இது... ?

குற்றம் செய்தவனைக் கையும் களவுமாகப் பிடித்து கலெக்டர் தண்டனை கொடுக்கிறார். தவறைத் திருத்தினால் கடையைத் திறக்கலாம் என்றால் சரி. ஆனால் கோர்ட் தண்டனைக்குரியவனை இவ்வளவு எளிதாக வெளியே விட்டாச்சு. அவன் பிசினஸும் தொடர்கிறது. இங்கே கலெக்டர் இப்போது எங்கே தன் மூஞ்சை வைத்துக் கொள்வார்?

இப்படித் தொடர்ந்து நடந்தால எதற்காக ஒரு கலெக்டர் வேணும். எதற்காக அவர் இது போல் தவறு செய்தவர்களை “வெட்டித்தனமாக”  ஒன்றுமில்லாத தண்டனை ஒண்ணைக் குடுக்கணும். இது ஒரு கலெக்டருக்கே கேவலம் இல்லையா?
ஒண்ணும் புரியலைடா ...சாமி!

கலெக்டருக்கும் ஒரு கேள்வி:

அந்தக் கட்டிடம் கட்ட ப்ளானை அப்ரூவ் செய்த அதிகாரிகள் என்ன ஆனார்கள்? கட்டிடம் கட்டும்போது கார்ப்ரேஷன் அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட வேண்டுமாமே ... அவர்கள் அப்போது தூங்கிப் போனார்கள். இப்போது அவர்களை முதலில் ‘உள்ளே’ போட வேண்டாமா? போட்டுட்டீங்களா, கலெக்டர்?

அதுவும் தெரியலையே .. சாமி!

**********************************

 கிரிக்கெட் கதையும் நல்லா கீது ...

அது யாரு ஸ்ரீசாந்த். இவருதான காசு வாங்கிட்டு ஆடினார்னு உள்ளே போட்டாங்க; அவரும் நண்பர்கள் மூலமா இப்படிப் பண்ணிட்டேன் அப்டின்னும் சொன்னாரே .. இப்ப வெளியே விட்டதும் அவர் லாயர் சொல்லிக் கொடுத்ததை சொல்றார்: அவர் எப்போதும் ஒழுங்காகவே விளையாடினாறாம்’!!!!

அவர் கேஸ் அம்புட்டுதான். நம்ம நீதி மன்றங்கள் இருக்கவே இருக்கு. கோடிக்கணக்கிலே தப்பு பண்ணினா அது ஒண்ணுமே பண்ணாதுன்னு ஸ்ரீசாந்துக்குப் புரிஞ்சி போச்சி ... அதான் இப்படி தத்துவமெல்லாம் பேசுறாரு ,,,

 நடக்கட்டும் மகாதேவா ... எல்லாம் நடக்கட்டும்.(நடந்தவை எல்லாமே நன்றாகவே நடந்தது ....)

***********************************

கோல்ப் ஆட்டத்திலும் சூதாட்டமாம்.
A bridie, I win, a bogey, you lose. அடப்பாவிகளா .. எதிலெதிலெல்லாம், எதற்கெல்லாம்  இப்படி ஆட்டம் போடுவீர்கள் !!!

 ***************************************


*

Viewing all articles
Browse latest Browse all 777

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்