Quantcast
Channel: தருமி (SAM)
Viewing all 777 articles
Browse latest View live

1101- யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 5

$
0
0


ஏனைய பதிவுகள் ….



தொடர்ச்சி ... 










மோசேயின் சட்டங்கள் மூன்று  பிரிவுகள் ஆகும்.

1. உடன்படிக்கை சட்டங்கள் (Covenant Codes )-  சிவில் சட்டங்கள் - இன்றைய நமது ஐபிசி (IPC - Indian Penal Code) சட்டங்கள் மாதிரி.
2. குருத்துவ சட்டங்கள் (Priestly Codes)
3.  இணையச் சட்டங்கள் (Deuteronomy ) -  சமூக அல்லது புதுச் சட்டங்கள்.

 இஸ்ரேலிய சமூகத்திற்குக் கொடுப்பதற்காக கடவுளே அச்சட்டங்களைத்  தம்மிடம் வழங்கியதாக மோசே கூறினார்

 இன்னொரு சம்பிரதாயமும் மிக முக்கியமானது. அது விருத்தசேதனம். (37) ஏன் இப்போது இந்த விருத்தசேதனம் கிருத்துவ மதத்தில் இல்லை என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன்.  அதற்கான பதில் இந்த நூலில் பின்வரும் பக்கங்களில் கிடைத்தது.

 உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை (தீர்க்கதரிசி) அவர்களுடைய சகோதரர்களிடமிருந்து நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். ( உபாகமம் இணைச்சட்டம் 18;18)

 இது யோசுவா குறித்து எழுதப்பட்ட வசனம் ஆனால் அது இயேசுவை குறித்து எழுதப்பட்டதாக புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் கூறிக் கொள்வர். (அப்போஸ்தலர் நடபடிக்கைகள் - திருத்தூதர் பணிகள் 3:21,22)

 புற ஜாதியிடமிருந்து கைப்பற்றிய நாடுகளை லேவி ஜாதியினரைத் தவிர ஏனைய இஸ்ரேலியர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டனர். லேவியருக்குச் சொத்தில் பங்கு இல்லை. ஆனால் இஸ்ரேல் கடவுளுக்குக் குருக்களாக இருந்து பணியாற்றும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.( இந்த லேவியருக்குத்தான்காணிக்கை கொடுக்க வேண்டும் என்று ப.ஏற்பாட்டில் வலிந்து வலிந்து சொல்லப்படும். அட ..  நம் வரலாற்றில் அய்யர்கள் ராஜ குருக்களாக இருந்ததாகச் சொல்வார்கள். தட்சணைகள், பரிகாரங்கள் எல்லாம் அவர்களுக்குத் தானே!  History repeats - sadly!!  புரியுதா?) (38)

 போரில் வென்று ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்த இப்தா நேர்த்திக் கடனாக தனது ஒரே மகளை எரிபலியாக எரித்து விட்டார்.  இஸ்ரேலியர்களின் கடவுளுக்கு நரபலி  என்றால் மிகவும் விருப்பமான ஒன்று!

 இயேசுவே கூட கடவுள் நம் பாவங்களுக்குக் கழுவாயாக அமையுமாறு நரபலியாகச் செலுத்தினார் என்று பைபிள் அறிவிக்கிறது.

ஆசிரியர் இதில் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.  ஆபிரகாம் ஈசாக்கை கடவுளுக்கு பலியிடப் போனார் அடுத்து இப்தா தன் மகளைக் கடவுளுக்குப் பலியாக்கினார்.  இந்த இரண்டிலும் பலி செலுத்த முயன்றவர்; பலிப் பொருள்; பலியைப் பெற்ற கடவுள் என்ற மூவரும் இருந்தார்கள். ஆனால்  மூன்றாவது சம்பவத்தில் கடவுள் இயேசுவை பலியாகச் செலுத்தினார். பலி செலுத்தியவர் ஆண்டவர்; இயேசு  பலிப் பொருள்.  பலியைப் பெற்றுக் கொண்டவர் யார்?  இந்த கேள்விக்கு பதில் இல்லை என்கிறார்.(39)

அடுத்து கிறித்துவத்தில் அதிகமாகப் புகழப்படும் தாவீது, அவரது மகன் சாலமன் பிறந்த பிறப்பை பற்றி -  அது ஒரு கேடுகெட்ட, அவலட்சணமான கதை -  ஆசிரியர் கூறுகிறார். தாவீது  தனது படை வீரன் உரியாவைக் கொன்று, அவன்  மனைவி பத்சேபா மூலம் இரண்டாவது கர்ப்பத்தின் மூலம்  ஒரு மகனைப்  பெற்றெடுக்கிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1.3  )  அவன்தான் அதிபுத்திசாலி சாலமன். 

(ஏற்கனவே என் பழைய பதிவு ஒன்றில் ஆபிரஹாம் கதையை சுட்டிக் காண்பித்து எப்படி பெற்றோர்கள், அதுவும் பைபிள் தெரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆப்ரஹாம் என்ற பெயரை வைக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன். அதோடு இப்பொழுது தாவீது, சாலமன் என்ற இருவர் பெயரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். இருவருமே கீழ்த்தரமான மக்கள்.  ஆனால் வேத புத்தகம் சொல்வதால் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் இது வேடிக்கையா வேதனையை தெரியவில்லை!  ஆனால் நிச்சயமாக புரிந்தவர்களுக்கு இது வேதனையாகத்தான் இருக்க வேண்டும்.) (40)

வேதம் என்ன சொல்கிறது என்றால், “ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால் அந்த விபச்சாரனும் அந்த விபச்சாரியும் கொலை செய்யப்படக் கடவர்கள்”. (லேவி 20;10 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)

தாவீதின் இச்செயல் கடவுளின் பார்வையில் தீயதாகப் பட்டது. (2 சாமுவேல் 11:27) ஆனால் இதே தாவீது மிகவும் நல்லவர் என்றும் கடவுளின் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே அவர் செய்தார் என்றும் பைபிள் பாராட்டுகிறது. ஆனால்  கடவுள் தவறு செய்த  ஏரோபவாம் என்பவரைக் கண்டிக்கும் போது தாவீதைப் புகழ்ந்து பேசுகிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 14:8) (41) 

தாவீதின் மகனும், நீதிமானாவனாகவும் கருதப்படும் சாலமன்  இதோடு விட்டு விட்டாரா என்ன?கடவுள் புறஜாதியார் பெண்களை இஸ்ரேலியர் எவரும் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்(உபாகமம் - இணைச்சட்டம் 7:3).  ஆனால் சாலமனோ ஆயிரம் புறஜாதிப் பெண்களை தன் மனைவியாக வைத்திருந்தார்.  அதில் 700 மனைவிகள்; 300 பேர் வைப்பாட்டிகள்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1-3) 

எஸ்ரா காலத்தில் ஆளுக்கு ஒன்று என வெறும் நூத்தி எட்டு பேர் பிற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்திருந்தனர். அதற்காக கோபம் கொண்ட கடவுள், “ நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை”,  என்று தன் பிள்ளைகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியையும் மீறி (யோசுவா 1:5 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)  அவர்களைக் கைவிட்டுவிட்டு எருசலேம் ஆலயத்தை விட்டு வெளியேறினார். ஆனால் ஒரே மனிதர் ஆயிரம் பிற ஜாதிப் பெண்களை வைத்திருந்த மனிதனாகிய சாலமன் மன்னர் கட்டிய கோயிலில் தான் முதன்முதலில் குடியேறினார்! (42)

நெபுகத்நெசரின் படையெடுப்பும் யூதர்களின் வீழ்ச்சியும்:
,
 கிமு 586ல் நெபுகத்நெசர் என்ற புறஜாதி மன்னன் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்றான். சாலமன் கட்டிய ஆலயத்தையும் சேதப்படுத்தினர். இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கடவுளின் தோல்வியை சகித்துக்கொள்ள முடியவில்லை.  ஏதேனும் காரணம் கூறலாம் என்று இறைவாக்கினர்கள் முயற்சி செய்து தடுமாறியது கீழே உள்ள வாசகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
( ஏரேமியா - 25:6-9;  51:34;  51 36,37
எஸ்றா 9: 11-15
எசக்கியேல் 9:3;  10: 4-5; 18 , 19
எசாயா 52:8; 
சக்ரியா 8:3 (பக்கம் 46)
இந்த படையெடுப்பினால்  இஸ்ரேலிய யூதர்கள் பல நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள் இவர்களைத்தான் “ காணாமல் போன ஆடுகள்” என்று புதிய ஏற்பாடு அழைக்கிறது.  எருசலேம் ஆலயம் சேதமானது; பாபிலோன் மன்னனுக்கு மக்கள் அடிமையாக்கப்உ பட்டனர்.

இறைவாக்கினர் எனப்பட்ட தீர்க்கதரிசிகள்: 
தாவீது மன்னனால் கட்டியெழுப்பப்பட்ட இஸ்ரேலியப் பேரரசு தம் கண் முன்னே புறஜாதியாரிடம் விழுந்து கிடப்பதைக் காண இறைவாக்கினருக்குச் சகிக்கவில்லை. (ஆமோஸ் 9:11)
கிபி 49ல்  கூடிய எருசலேம் சங்கத்தில் இச் சூழ்நிலைகளிலிருந்து மீள்வதற்குப் ”பவுல் குழுவினர்” உதவக்கூடும் என எதிர்பார்த்து தான் இயேசுவின் சகோதரரான யாக்கோபு பவுலுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார்.(48) 

இஸ்ரேலிய யூதர்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த போது தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த புற ஜாதியர்களுடைய மதம் சார்ந்த கொள்கைகளின் சிறப்புகளைக் கண்டனர் அவற்றின் மேன்மையைப் புரிந்து கொண்டு அக்கொள்கைகளை தம் மதத்தின் புதிய கொள்கைகளாகப் பதிவு செய்தனர். (51)

அப்படி வந்த புதிய மாற்றங்கள்:

1.     மீட்பர் என்னும் மெசியாவாகிய இரட்சகர் கொள்கை  -   இது கிரேக்க மதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. (வழி, வாய்மை, வாழ்வு -  யோவான் நற்செய்தி நூல் விளக்கம்.  ஆசிரியர் ஞான.  ராபின்சன்;  பக்கம் 21)
2.         2. மெசியா ஒரு விடுதலை வீரரே தவிர அவரைக் கடவுள் என பழைய ஏற்பாடு         அறிவிக்கவில்லை.
3.     ஞானஸ்நானம் -  கிரேக்க மதம்
4.      இரண்டாம் வருகை -  பாரசீக மித்ராயிச  மதம்
5.      உயிர்த்தெழுதல் -  பாரசீக ஜொராஷ்ட்ரிய மதம்
6.      மறுவாழ்வு -               ,,              ,,                 ,,
7.     கன்னிப் பிறப்பு -         ,,              ,,                 ,,
8.     நியாயத்தீர்ப்பு -  எகிப்திய மதம். (கி.ர. அனுமந்தன், பண்டைக்கால நாகரிகங்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்)

மேற்கொண்ட மாற்றங்கள் எவையும் கிமு 586ல்  நிகழ்ந்த பாபிலோனிய படையெடுப்புக்கு முன்னர் எழுதப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டு நூல்களில் இல்லை. 














1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6

$
0
0



ஏனைய பதிவுகள் ….


தொடர்ச்சி ... 
பைபிளின் புதிய ஏற்பாடு





 மத்தேயு,மார்க்,லூக்கா,யோவான்இவர்களில்லூக்காமட்டும்பிறஜாதிகிரேக்கர்இயேசுவைகண்ணால்பார்க்காதவர்.

 நற்செய்திகள்இரண்டுவெவ்வேறுதளங்களில்இருந்துதொடங்கப்பட்டன.மத்தேயு,லூக்காகன்னிமேரியின்கருவிலிருந்துஇயேசுஉருவானதைகூறித்தொடங்குவர். ஆனால்மார்க்கும்,யோவானும்அதைத்தாங்கள்  அறிந்ததாகக்காட்டிக்கொள்ளமாட்டார்கள்.திருமுழுக்குஎன்பதிலிருந்துஅவருடையநூல்கள்தொடங்குகின்றன.(56)

 யூதமரபுகளில்இருந்துமாறுபட்டுபரிசுத்தஆவிமற்றும்விசுவாசம்ஆகியவற்றைமட்டுமேஅடிப்படையாகக்கொண்டஒருபுதியமதம்பவுல்மூலம்கிபி 49 இல்நடந்தஎருசலேம்சங்கக்கூட்டத்திற்குபின்னரேஉருவாயிற்று. பைபிள்தன்னுடையவரலாற்றுதளத்திலிருந்துவிசுவாசத்தின்பாதைக்குஇப்போதுதான்தடம்மாறிப்போனது.

 புதியஏற்பாட்டில்மொத்தம் 27 புத்தகங்கள்உள்ளன. முதல்நூல்எழுதப்பட்டகாலம்கிபி 52க்குப்  பின்னர்இயேசுமரணம்அடைந்துசுமார் 20 ஆண்டுகள்அப்போதுஆகியிருந்தன. அதாவதுகிபி 49 கூடியஎருசலேம்சங்கத்துக்கும்மூன்றுஆண்டுகளுக்குப்பின்னர்புதியஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும்,அவைஎழுதப்பட்டகாலவரிசைப்படிபைபிளில்இடம்பெறவில்லை.

தற்போதுபுதியஏற்பாட்டில்வரிசைப்படுத்திக்கொள்ளமுறையின்படிமத்தேயு,மாற்கு,லூக்கா,யோவான்நான்குநூல்களும்இயேசுஉயிரோடுவாழ்ந்தகாலத்தில்உள்ளஅவரதுவாழ்க்கைச்சம்பவங்கள்ஆகும்.
அப்போஸ்தலர்நடவடிக்கைகள்அல்லதுதிருத்தூதர்பணிகள்நூலில்இயேசுவின்சிலுவைசம்பவத்துக்குப்பிறகுஅவரதுசீடர்கள்செய்தபணிகளும்
அப்போஸ்தலன்ஆகஇல்லாதிருந்தும்தன்னைத்தானேஅப்போஸ்தலன்எனகூறிக்கொண்டவர்  எனக்குற்றம்சாட்டப்பட்டபவுல் மற்றும்பர்னபாஸ்போன்றஅவருடையகுழுவினர்செய்தபணிகளும்எழுதப்பட்டுள்ளன.  

அதன்பின்பவுல்எழுதிய 14 கடிதங்கள்உள்ளன.  உண்மையில்பவுல்எழுதியகடிதங்கள்தான்காலத்தால்முதலில்எழுதப்பட்டவையாகும். ரோமர் முதலாக எபிரேயர் முடிய  பவுல் எழுதிய கடிதங்களுக்குப் பின் இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) எழுதிய கடிதம் உள்ளது. (57)
இயேசுவின்எதிரிஎனபொருள்படும்எதிர்க்கிறிஸ்து (anti-Christ) என்பவர்,பவுல்மற்றும்அவருடையகுழுவினர்தாம்என்கிறஅதிர்ச்சியானதகவலும்அவற்றில்இடம்பெற்றுள்ளது.(58)

 இயேசுவின்வாழ்க்கைவரலாறு:
 மத்தேயுலூக்காஇயேசுவின்தலைமுறைப்பட்டியலைத்தருகிறார்கள். (மத்.1:1-16; லூக்கா 3.23-34) இந்தஇரண்டிலும்பல்வேறுமுரண்பாடுகள்காணப்படுகின்றன.
 உதாரணமாகஇயேசுவின்தந்தையோசேப்புஎனகருதப்படுகிறது.யோசேப்பின்தந்தையின்பெயர்யாக்கோபுஎன  மத்தேயுவும் (மத் 1:16), ஏலிஎன 
லூக்காவும் (லூக் 3:23)  மாறுபட்டுஎழுதுகின்றனர். (59)
 மத்தேயுவிவரிக்கும்தலைமுறைப்பட்டியலில் 41 தலைமுறைகள்மட்டும்இருந்ததாகவும்லூக்காவின்பட்டியலில் 56 தலைமுறைஇருந்ததாகவும்அறிவிக்கிறார்கள்

லூக்காவும்  அவருடையநற்செய்திநூலும்:
 இயேசுவைதன்கண்களால்கூடகாணாதவர்லூக்கா.அவர்முன்னரேஎழுதப்பட்டிருந்தமத்தேயு,மார்க்குஇரண்டையும்நன்குபடித்துதம்முடையநூலைஎழுதியதாககூறுகிறார். (1:1-4)

 அவர்வசனங்களில் 350 வசனங்கள்மார்க்குஎழுதியநூலில்உள்ளன; 325 வசனங்கள்மத்தேயுநூலில்உள்ளன. அந்த நூல்களில்இல்லாதபலவிஷயங்களைதன்கொள்கைக்குஏற்பமாற்றிதனதுநூலில்எழுதியுள்ளார்மூலநூல்களில்இஸ்ரேலியஜாதிகளுக்குமட்டுமேஇயேசுஆதரவாகஇருந்ததாகஎழுதப்பட்டிருந்தபகுதிகளைமாற்றிவிடுகிறார்அல்லதுதிருத்தம்செய்துகொள்கிறார்ஒருஉதாரணம்நல்லசமாரியன்கதை. (60)

திருச்சட்டத்தில்வல்லுநர்ஒருவர்இயேசுவிடம்வந்து 10 கட்டளைகளில்எதுசிறந்ததுஎன்றுகேட்டார்திருச்சட்டத்தில்சொல்லியிருப்பதைசெய்யுங்கள்என்றும்உன்மீதுஅன்புசெலுத்துவதுபோல்உன்அயலான்மீதும்அன்புசெலுத்துவாயாகஎன்றும்பதில்கூறியதாகபைபிளில்உள்ளது. மத்தேயுமார்க்குஇரண்டிலும்இதுஉள்ளதுஅதோடுஅங்குஅதுமுடிந்துவிடுகிறது. (மத் 22:35-40; மாற்கு 12:26-34). 

ஆனால்லூக்காநற்செய்தியில்திருச்சட்டநூல்வல்லுநர்அடுத்துஒருகேள்விகேட்கிறார். அதற்குப்பதில்சொல்லும்விதமாகநல்லசமாரியன்கதையைஇயேசுகூறியதாகஎழுதுகிறார். இந்தக்கதைமிகவும்பிரபலமானஒன்றாகும். இயேசுவுக்குமிகவும்சிறந்தகிரீடத்தைவழங்குவதற்குஇக்கதையைபலரும்இன்றுபயன்படுத்துவர். ஆனால்லூக்காவின்மூலநூலாகியமத்தேயுவிலோ, மாற்கிலோஇதுஇல்லை. இதன்மூலம்இயேசுவுக்குலூக்காஒருபுதியமுகவரியைக்கொடுக்கிறார். யூதர்கள்சமாரியர்களைப்புறசாதியினரைப்போலதீண்டத்தகாதவர்கள்ளகவேநடத்துவர்ஆனால்ஒருயூதனாகஇருந்தும்இயேசுசமாரியர்மீதுஅன்புசெலுத்துவதாகக்காட்டிக்கொள்வதற்குஇச்சம்பவம்லூக்காவிற்குப்பயன்பட்டது. (லூக்கா 10:29-37) .  

இதுபோலஇன்னொருமாற்றமும்உண்டு. கானான்தேசத்துப்பிறஜாதிப்பெண்ணைஏசுநாயாகவிரட்டியதாகமத்தேயும், மாற்கும்எழுதுவார்கள். இயேசுபிறஜாதியார்மீதுவிரோதம்பாராட்டியதாகமூலநூல்களில்எழுதப்பட்டுள்ளன. (மத் 15:21-28; நாற்கு 7:24-28)ஆனால்இந்தச்சம்பவத்தைகண்டுகொள்ளாமல்விட்டுவிடுவார் லூக்கா.(61)

 யூதர்களின்மீதுகொண்டிருக்கும்அளப்பரியபாசத்தைதவிர்த்துவிடுகிறார் லூக்கா.சமாரியர்மீதும்பிறர்மீதும்கொண்டிருந்தவெறுப்பைமறைத்துஅவர்களுடன்அவர்நல்லுறவுகொண்டுஉழைத்ததுபோலவும்தாழ்த்தப்பட்ட குழுவினருக்காகஅவர்உழைத்ததாகவும்மாற்றிஎழுதுகிறார். அதற்கானசிலஉதாரணங்கள்:
  •  ஊனமுற்றோர்மீதுபரிவு 13: 10 - 13
  •  விதவைகளின்நலனில்ஈடுபாடு 7: 11 - 15  மற்றும்18: 1- 18
  •   ஏழைகளுக்காகஉழைத்தல் 16: 19 - 31 மற்றும் 18: 24, 25
  •  பாவிகளைமீட்பதில்விருப்பம் 15: 11 - 31 மற்றும் 15: 8 - 10 மற்றும் 19: 1-7
  • வரிதண்டும்பாவிகளையும்ரட்சிக்கும்மனப்பான்மை 18: 9 - 14
  •  
இந்தப்புதியதகவல்கள்மூலம்இயேசுவுக்குஒருபுதியமுகத்தையும்ஜாதிகளைகடந்தபொதுவானஒருமுகவரியையும்கொடுக்கிறார்.

 இயேசுவைஉலகுக்குஅறிமுகப்படுத்தவிரும்புபவர்கள்இன்றுலூக்காவின்இந்தமுகவரியைஇயேசுவுக்குவழங்குகிறார்கள்.ஆனால்லூக்காஇயேசுவுக்காகக்கொடுத்திருப்பதுஉண்மையானதகவல்கள்அல்ல.அவருடையசீடர்கள்இத்தகவல்கள்எதுவும்இயேசுவுக்குஉரியதாகஎழுதவில்லை.இயேசுவின்பெயரால்புதியமதத்தைஉருவாக்கியபோதுலூக்காஇயேசுவுக்குவழங்கியிருக்கும்இதனைஅடிப்படையாகக்கொண்டுள்ளனர்.ஆனால்ஏசுவின்முகம்வேறுவகையானது.(62)

 இயேசுவின்அற்புதங்களாலேயே  மக்கள்கவரப்பட்டனர்

மாற்கு 3:8  -- “...திரளானஜனங்கள்அவர்செய்தஅற்புதங்களைகுறித்துகேள்விப்பட்டுஅவரிடத்தில்வந்தார்கள். ( ஆங்கிலத்திலும்புராட்டஸ்டன்ட்மொழிபெயர்ப்பிலும்அற்புதங்கள்என்றசொல்இல்லை.)

மாற்கு 4:35-41  - வீசும் புயலைநிறுத்திபடகில்இருந்தசீடர்களைகாப்பாற்றியது -  ”காற்றும்கடலும்இவருக்குக்கீழ்ப்படிகின்றனவே !இவர்யாரோ?”

சீடர்கள்கூடஇயேசுவைமெசியாஎனஅறிந்துபின்பற்றுவதற்குப்பதில்அவருடையஅற்புதங்களைக்கண்டுஅவரைப்பின்பற்றினர்எனஅறியலாம்.

 இயேசுபெருந்திரளாகக்கூடியிருந்தமக்களிடம்உவமையில்இயேசுஉரையாடிக்கொண்டிருந்தார்அதைக்கேள்விகேட்டசீடர்களிடம்மறைபொருள்அறியஉங்களுக்குக்கொடுத்துவைத்திருக்கிறது. அவர்களுக்கோகொடுத்துவைக்கவில்லை. உள்ளவருக்குகொடுக்கப்படும்; அவர்நிறைவாகப்பெறுவார். மாறாகஇல்லாதவரிடமிருந்துஉள்ளதும்எடுக்கப்படும்என்றார். (மத் 13;10-12)  (உள்ளவருக்குக் கொடுப்பதும், இல்லாதவரிடமிருந்து எடுக்கப்படும் என்னும் இந்தத்தத்துவம்எனக்குச்சுத்தமாகப்புரியவில்லை. யாரும்விளக்கினால்புரிந்துகொள்வேன்.
இரண்டாவதாக,  மறைபொருளைஅவர்களுக்குப்புரியாதபடிஉவமைகள்மூலம்ஏன்பேசவேண்டும்? பயன்என்ன?.) (64)

மறைபொருள்சீடர்களுக்குப்புரியும்என்றார். பாவம் .. அவர்களுக்கும்  ஏசுசொன்னவயலில்தோன்றியகளைகள்பற்றியஉவமைபுரியவில்லை.(மத் 13:36) 
(யாருக்காக, எதற்காக, மறைமுகமாக, உவமைகளோடுஇயேசுபேசினார்என்பதுஎனக்குஒருபெரியகேள்வியாகவேஇருக்கிறது)

மேற்கண்டதகவல்களிலிருந்துஇயேசுவைமெசியாஎனவிசுவசித்துஎவரும்அவரைப்பின்பற்றவில்லைஎன்பதைஅறியலாம்.அவருடையசீடர்கள்கூடஅவர்யார்என்பதுதெரியாமலும்,அவரதுபேச்சுபுரியாமலும்,அவரதுபேச்சைவிசுவாசிக்காமலும் தான்அவரோடுஉறவாடிஇருக்கிறார்கள்.ஆனால்அவர்செய்தஅற்புதங்கள்அனைத்துதரப்பினரையும்கவர்ந்துள்ளது. (65)

*****

ஒருசிறுபின்குறிப்பு

 சினிமாவைப்பற்றிஎழுதினால்அதிகமானவாசகர்கள்வருவார்கள்என்றுதான்நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால்கடைசிஇரண்டுபதிவுகளில்கருப்புதுரைஎன்றபடத்தைபற்றிஎழுதினேன்; 25 பேர்மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.ஆனால்அதைவிடமூன்றுமடங்குஅளவுஇந்தத்தலைப்பில்எழுதியதைவாசித்துஇருக்கிறீர்கள்.

மிக்கமகிழ்ச்சி.

 ஆனால்நீங்கள்வந்ததும்போனதும்தடங்கள்ஏதும்இல்லாமல்சென்று விட்டீர்கள். எனக்குப்பலகேள்விகள்;  உங்களுக்குப்பதில்தெரிந்தால்ஏன்சொல்லக்கூடாது?

 நான்தவறாகஎழுதலாம் - உங்களைப்பொறுத்தவரையில்.அப்படியிருந்தால்அதைஏன்நீங்கள் மறுக்கக்கூடாது.

 இப்படிப்பலகேள்விகள்எனக்கு.இந்தகேள்விகளுக்காவது  பதில்தருவீர்களா???










*



1103. கொரானாவும் நானும் ….. 1

$
0
0



*

                              

 

எழுத ஆரம்பித்த நாள்: 4.8.20

வலைக்குவந்தேஒருமாதத்திற்குமேல்ஓடிவிட்டது.   ஏழுமலை ... ஏழுகடல்தாண்டியஅனுபவம்தான்  இதுவரை.   என்னென்னவோநடந்தது ..எப்படிஎப்படியோஇருந்ததுஎல்லாம்  ஆங்காங்கே  நினைவுகளாகஒட்டிக்கொண்டுநிற்கின்றன. துடைத்துப்போடவும்முடியவில்லைதொகுத்துத்தரவும்முடியவில்லை

தொடர்ந்து எழுத முடியவில்லை. தொடரணும் …

 

 5.8.20

பெற்றுவளர்த்தஇரண்டுபிள்ளைகளும்பெறாமல்வந்துசேர்ந்தமூன்றுபிள்ளைகளும்கட்டிஇழுத்து வந்துஇதுவரைகொண்டுவந்துவிட்டார்கள்அவர்கள்மட்டும்தானாபெரியபடையேஅல்லவா  திரண்டுஎன்பின்னால்  நின்றதுஎத்தனைகரிசனம்எத்தனைஅன்புஎங்கெங்கிருந்தோஉதவி.  

 

உங்களையெல்லாம்  மீண்டும்என்மனதிற்குள்  ஒருதரிசனம்  செய்யஆசை. அதுவே இந்த எழுத்துக்களின் நோக்கம்.

 

6.8.20

ஜூன்மாதகடைசிவாரம்வலதுபக்கம்தோள்பட்டைவலிஅத்தனைஅசதிபாரசிட்டமால்  வாங்கப்போனால்கடையில்கிடையாதுஎன்றுசொல்லிவிட்டார்கள்விற்பனைக்குஇல்லையாம். ICMR ல்வேலைபார்க்கும்நண்பனுக்கு ( இக்கட்டுரையில் இனி ‘நண்பன்’என்றால்அனேகமாகஅவன்ஒருமாணவநண்பன் என்று கொள்ளவும்.).  சிலமாத்திரைகள்சொன்னான்இரண்டுநாள்சாப்பிட்டேன்பயனேதுமில்லைஅவனுக்குவாட்ஸ்அப்பில்  வாய்ஸ்மெசேஜ்கொடுத்தேன்என்னப்பாபண்றதுஎன்றுகேட்டிருந்தேன்மூன்றுநாளாகியும்பதில்இல்லைஆச்சரியம்இன்னொருநண்பனுக்குசெய்திசொன்னேன்சிறிதுநேரத்தில் ICMR நண்பரிடமிருந்து  போன்வந்தது. “அக்காவிடம்கொடுங்கள்என்றான்மனைவியிடம்கொடுத்தேன்அவன்பேசஆரம்பித்ததும்மனைவிஎன்னிடம்சைக்கினையில்  அழுகிறான்என்றாள். வாங்கிநான்பேசஆரம்பித்தேன்அவன்நான்குநாட்களாகாககுவாரண்ட்டையினில்  இருக்கிறான்அதனால்என்செய்தியைவாசிக்கவில்லைஅதற்கு அத்தனை கவலை அவனுக்கு. அவனுக்குநான்ஆறுதல்சொல்லவேண்டியதாகிவிட்டது. 

 

 9.8.20 (இன்று எழுதி முடித்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கணினி முன் அமர்கிறேன் ….)

 

அடுத்தநாள்காலை. நண்பன் அனுப்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துப் போனார். எப்போ ரிசல்ட் தெரியும் என்றேன். தினமும் 1500 டெஸ்ட் செய்ய முடியும்; ஆனால் 2000க்கும் அதிகமாக வருகின்றன; நாலைந்து நாட்களாகலாம் என்றார். நண்பனிருக்க நமக்கேன் கவலை என்பது போல் இரண்டாம்  நாளே ரிப்போர்ட் வந்தது. கொரோனா நெகட்டிவ். மகிழ்ச்சி. ஆனால் குடும்ப மருத்துவர் உடனே ஒரு ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்றார். மாலை போனோம். மீண்டும் எப்படியோ, மக்களெல்லாம் காத்திருக்க நான் போனதும் பத்து நிமிடங்களுக்குள் என்னை அழைத்தார்கள். ஸ்கேன் எடுத்ததும் ரிசல்ட் மாலை 8 மணிக்குக் கிடைக்கும் என்றார்கள். ரிசல்டிற்காகக் காத்திருந்தேன்.

 

அதற்குள் நண்பர்கள் என் பிள்ளைகளோடும், சென்னையில் பெரிய பதவியில் உள்ள இன்னொரு நண்பனிடமும் கலந்து பேசி பல முடிவுகளை எடுத்துள்ளார்கள். (அந்த “இன்னொரு நண்பன்” படிக்கிற காலத்தில், அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும், அதுவும் என் மனைவிக்குப் பிடித்த விளையாட்டுப் பிள்ளை..) தேவையானால் அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பது சென்னை நண்பனின் பெரிய மருத்துவ நண்பர் கொடுத்த அறிவுரை. மருத்துவம் முடிந்ததும் சென்னைக்குப் பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்கள்.

 

8 மணியாயிற்று. தகவல் இல்லை. 8.30 மணிக்கு நண்பர்கள் வந்தார்கள். மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்று தகவல் சொன்னார்கள். உங்கள் காரில் தானே என்றேன். இல்லை .. ஆம்புலென்ஸ் வந்திருக்கிறது என்றார்கள். கொஞ்சம் பக் என்றிருந்தது. இல்லை .. அதுதான் வழக்கம் என்றார்கள். அத்தனை குறுகிய காலத்தில் ஆம்புலென்ஸை உடனே வரவழைத்தது மட்டுமில்லாமல் சென்னை நண்பன் மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளை அனுமதிப்பதை மேற்பார்வையிடும் மருத்துவரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். சென்றேன்; உடனே அனுமதிக்கப்பட்டேன். மற்றவர்கள் படும் சிரமத்தை நான் உள்ளே சென்ற பிறகுதான் புரிந்துகொண்டேன்.

 

மருத்துவமனைப் பொறுப்பை மூன்றாவது மகன், அதாவது என் மருமகன் எடுத்துக் கொண்டார். சாப்பாடு எடுத்து வருவது, மருத்துவர்களைப் பார்ப்பது … அதெல்லாம் சரி .. ஆனால் மூத்திர பாட்டிலைக் காலி செய்து கொடுப்பதும், கழிவறைக்கு வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு உரிய நாற்காலையைத் தூக்கி உடன் வருவதும், டையாப்பர் மாட்டி விடுவதும் … அம்மாடி! … அவனின் கன்னத்தை இரு விரல்களால் கிள்ளி ஒரு முறை முத்தமிட்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்!

 

மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த நாளே ஒரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி வந்தது. யாரென்று தெரியாமல் கேட்டேன். யார் என்பதைச் சொன்னார். தொடர்ந்து உங்களுக்கான மருத்துவத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். மதுரையிலுள்ள மாணவி நான் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன் என்று தன் வகுப்புத் தோழன் - அவன் இப்போது ஒரு மாவட்ட ஆட்சியர் - தகவல் தெரிவித்திருக்கிறாள். அவன் உடனே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளான். அதன் பின் மனைவியிடம் பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின் பல நண்பர்கள் நாங்களும் அவரிடம் பேசியுள்ளேன் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் பயம் தான். அவருக்கே அலுப்பு வந்து விடக் கூடாதே என்று. சில முறை என்னிடம் பேசினார். பேசும் போதெல்லாம் “நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

 

இன்னொரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்தும் என்னிடம் சில சமயமும், மருமகனிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி என் உடல் நிலை முன்னேறி வருவது பற்றி அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்தக் கவனிப்பும் சென்னை நண்பன் மூலமாகவே வந்தது.

 

ஏறத்தாழ ஒரு வாரம் மருத்துமனை வாசம். மறக்க முடியாத பல கொடூரமான நிகழ்வுகளும் நடந்தன. மறக்க நினைத்தும் முடியாதவைகள். பிறகு தனியே தொகுத்து எழுத வேண்டும்.

 

20.7.20 மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டேன். மருமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தேன். முகத்தில் வேகமாக வீசிய காற்று சுகமாக இருந்தது. திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் புறநகர்ப் பகுதியில் வந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. வீட்டிற்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தோம்.

 

முக்கிய வீதியில் வந்து கொண்டிருந்தோம். இதில் இரு வினாடிகள் … சாலை இடது பக்கம் திரும்பியதும் அடுத்த மூன்று வினாடிகள். அவ்வளவே வீட்டிற்கான தொலைவு. அந்தக் கடைசி 5 வினாடிகள். They started moving in slow motion. முதல் இரு வினாடிகளில் “என் வீட்டை”ப் பார்த்தேன். பச்சைப் பசேலென்ற மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன வீடு. அதுவும் பெரிய சாலையிலிருந்து பார்க்கும் போது … தனியான ஓரழகுப் பச்சை வண்ணத்தில் கொன்றைப் பூவின் இலைகள் … அவைகளின் ஊடே அத்தனைச் சிவப்பாக கொன்றைப் பூக்கள். இலையும் மரங்களும் அத்தனை அழகூட்டின. கார் இடது பக்கம் திரும்புகிறது … அடுத்த மூன்று வினாடிகளில் பிள்ளைகளும், நண்பர்களும் எனக்காக.. என் நாளைய பொழுதிற்காக எடுத்திருக்கும் முடிவுகள் நினைவுக்கு வந்தன. இது தான் ”என்” வீடு… வாழ் நாளெல்லாம் இங்கு தான் என்று நினைத்து வைத்திருந்த எண்ணங்களை நான் நினைத்ததை விட எளிதாக அப்படியே மறந்து… புறந்தள்ளி விட்டு “அந்த” வீட்டிற்குள் நுழைந்தேன்.

 

வீட்டிற்கு வந்ததும் இன்னும் ஒரு பிரச்சனை -- மூச்சு வாங்குவது. சின்ன வேலை செய்தாலும், நான்கடிகள் நடந்தாலும் மூச்சு வாங்கும். நான்காவது நாள். நானும் பிள்ளைகளும், மனைவியும் உட்கார்ந்து ஒரு flash back ஓட்டினோம். கொரோனா ஆரம்பித்த காலத்தில் எப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்கார்களின் உதவி பற்றியெழுதியிருந்தேன். ஆனால் இந்தக் கடைசி சில நாட்களில் எனக்குக் கிடைத்த அன்பு என்னை நிச்சயமாக நிலை குலைய வைத்து விட்டது. அதுவும் நண்பர்களின் உதவி… அம்மம்மா … நேரடி உதவி செய்யாவிட்டாலும், தங்கள் குறுஞ் செய்திகள், தொலைபேசி அழைப்புகள்… அதில் இருந்த உண்மையான அன்பு. ஓரளவு என் மாணவர்களின் அன்பு எனக்குப் பழகியது தான். ஆனால் இந்த முறை.. ஆனால் இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல… மனைவியும். பிள்ளைகளையும் இந்த உணர்வு உண்மையிலேயே உலுக்கி எடுத்து விட்டது. அப்பாவின் மீது இத்தனை பேருக்கு இத்தனை அன்பா .. என்று பிள்ளைகளே வியந்து நின்றனர். ’என்னோடு பேசும் போது எத்தனைக் கலங்கி பேசினார்கள்’ என்றார்கள்.

 

(என்ன பிரச்சனை என்றால் இதைப் பற்றி கண்ணீர் மல்க பேசி கொண்டிருந்தோமா… - இப்போதெல்லாம் நான் மிக எளிதாக உடைந்து விடுகிறேன் - எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. சில நிமிடங்களே இருக்கும் இந்தப் பிரச்சனை அன்று முடிய ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. மருத்துவர்கள் கொடுத்த கடுமையான அறிவுரை : TALK LESS.)

 

 














*










1104. கொரோனாவும் நானும் ... 2

$
0
0




pix not for viewing ... only to record my days with corona....


in GH ward ....



back at home ...on a shaving day!!!




1105. கொரோனாவும் நானும் ... 3

$
0
0



*


மருத்துவ மனையில் சேர்ந்த முதல் நாள் இரவில்தான் முதல் ஷாக் வந்தது. ஆனால் அடுத்த நாளே இந்த ஷாக்குகள் பழகிப் போக ஆரம்பித்து விட்டன.  புதுக் கட்டிடத்தில் தான் green zone என்று பெயரிடப்பட்ட எங்கள் வார்டு இருந்தது. பழைய மருத்துவ மனையை ஏறத்தாழ 25-30 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். ஒரு வாழும் நரகம் போல் தோன்றும். எங்கும் அழுக்கு .. எச்சில்.. கழிவு நீர்… வெராண்டாவில் படுத்திருக்கும் நோயாளிகள் என்று அச்சமுறுத்தியன அந்தக் காலத்தில். ஆனால் இப்போது அப்படியேதும் அச்சம் தரும் நிலையில்லை. சுத்தம் இருந்தது; அதிகக் கூட்டமில்லை. ஆனாலும் வார்டுக்குள் நுழைந்ததும் முதலில் சிறிது பயம் தான் வந்தது. நீண்ட ஹால் .. எதிர் எதிராக இரு வரிசையாகப் படுக்கைகள்; படுக்கைகளுக்கு நடுவே ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி தானிருந்தது. ஹாலின் நடுவே மருத்துவர்களுக்கான சிறிய அறை. அதனால் ஹால் இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தன. எனக்கு முதலில் அந்தச் சின்ன மருத்துவ அறையின் மேற்குப் பக்கத்தில் இருந்த பகுதியில், வடக்குப் பக்கம் இருந்த வரிசையில்.. நட்ட நடுவே எனக்கு ஒரு கட்டில் கிடைத்தது. (நிலைமை அப்படித்தான்… ஏதோ ஒரு நோயாளி ஏதோ ஒரு நிலையில் - அதாவது உயிரோடு அல்லது அது இல்லாமலே ‘வெளியே’ சென்றால் தான் அடுத்தவருக்கு இடம் என்ற நிலை!) அப்படிப்பட்ட கூட்டத்திலும் எனக்கென்னவோ எளிதாக அட்மிஷன் கிடைத்தது - என் நண்பர்களின் முனைப்புகளினால் எளிதாக அமைந்தது. ரவியும் வைத்தியும் என்னை வார்டில் என்னைச் சேர்த்து விட்டு அடுத்த நாள் மதியம் வரை ஊண், உறக்கம் இல்லாமல் மருத்துவ மனையிலேயே இருந்திருக்கின்றனர். பாவம் பசங்க …


அதோடு மருத்துவ மனையிலிருந்து வெளி வந்து பல நாட்கள் வரை மக்கள் ரகசியமாக வைத்திருந்த செய்திகள் இப்போது தான் மெல்ல கசிந்து எனக்கு வருகின்றன. நிமோனியாவில் அடுத்தடுத்து ஆறு நிலைகள் இருக்குமாம். எனது நோயின் நிலை ஐந்தாவது நிலையில் இருந்திருக்கிறது. நல்ல சீரியஸ் கேஸ் தான் போலும்; இப்போது தான் தெரிகிறது. அதனால் தானோ என்னவோ, மருத்துவ மனையில் சேர்ந்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒரு S.O.S. voice mail கொடுத்து அவர்களை ‘அலற’ வைத்திருப்பேன் போலும். அதைப் பற்றி அவர்கள் என்னிடம் இப்போது பேசிய போது, அப்படி ஒரு மெயில் கொடுத்த நினைவே எனக்கில்லை. அது தான் சொன்னேனே … எது நிஜம் .. எது கனவு .. என்றே தெரியாத ஒரு நிலையில் முதல் சில நாட்கள் இருந்திருக்கிறேன்.


அந்த வார்டில் இருந்த நோயாளிகளில் ஏறத்தாழ 80% விழுக்காட்டிற்கு மேல் ஆண்கள் தான் நோயாளிகளாக இருந்தார்கள். The "weaker" sex were so low in number!!  Reason..? அம்மாமார்களும், மனைவிமார்களும் நோயாளிகளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெண்குலத்திற்கே என் மனமார்ந்த வணக்கம்.


முதலில் மிரட்சி. மணி பத்து பதினொன்றுக்கு மேலிருக்கும். என் வரிசையின் வலது பக்கக் கடைசியில் இருந்த ஓரிரு கட்டில்கள் முன் கூட்டமாக இருந்தது. மெல்லிய அழுகை ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. யாருக்கோ இறுதிப் போராட்டமாக இருந்திருக்க வேண்டும். அங்கே படுத்துத் தூங்கி விடுவேனா என்றும் தோன்றியது. ஆனால் இதுவரை இருந்தது போன்ற அசதியில் தூங்கி விட்டேன். நடுநிசி தாண்டி ஏதோ ஒரு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்தேன். கழிவறை என்று எங்கே என்று கேட்டு முதன் முறையாக அங்கே சென்றேன். சுத்தமாகவே இருந்தது. ஆனாலும் தரையை சமமாகப் போடாத கொத்தனார்களைத் திட்டிக் கொண்டேன் - ஏனெனில் அறைகளின் நடுவில் இருந்த பகுதி அதற்குள் பள்ளமாக தண்ணீர் - என்ன தண்ணீரோ? - தேங்கி நின்றது. வெஸ்டர்ன் டாய்லட்டில் பழகியாகி விட்டது. அது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்று இருந்தது. ஆனால் மேல்பாகமெல்லாம் காணாமல் போய் உடைந்து நின்றது. சமாளித்து வந்த வேலையை முடித்து விட்டு, ஹால் பக்கம் நடந்தேன். இரவிலும் ஆள் நடமாட்டம் இருந்தது. ஹாலின் வாசலுக்கு வரும் போது தான் அந்த முதல் ஷாக் கிடைத்தது. வாசலுக்கு அடுத்தாற்போல் ஒரு இரும்பு ஸ்ட்ரெட்சர் … அதில் நீளப் பொட்டலம் போல் வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட இறந்த உடலொன்று கிடந்தது. வர வேண்டியவர்கள் இன்னும் வரவில்லை போலும் .. கேட்பாரற்று சுவரோரம் ஒதுங்கிக் கிடந்தது. ஆனால் அடுத்த இரு நாளில் பார்த்த மரணங்கள் - என் கணக்கின்படி எட்டு அல்லது ஒன்பது - மெல்ல என்னைப் பழக்கிக் கொண்டிருந்தன. I was getting adapted to those sad but continuous events.


மருத்துவ மனை செல்வதற்கு முன்னும் பின்னும் ஏறத்தாழ பல நாட்களுக்கு இரவுப் பொழுதுகள் கனவிற்கும், நினைவிற்கும் நடுவில் ஊடாடிக்கொண்டே கழிகின்றன. விழித்துப் பார்த்தால் எது கனவு.. எது நிஜமென ஏதும் புரிவதில்லை. குழப்பம் தான் மிஞ்சி நின்றது. Meet the Spartans என்று ஒரு நகைச்சுவைப் படம். அதில் ராஜாவின் அரண்மனைக்குள் ஒரு இருண்ட குழி இருக்கும். ராஜா வேண்டாதவர்களை அதில் தள்ளி விடுவார். ஆழம் தெரியாத குழி. படத்தில் அந்தக் குழியில் வட்ட மேடை ஒன்றைச் சுற்றியிருக்கும். எனக்கென்னவோ மருத்துவ மனையில் சேர்ந்த முதல் மூன்று நான்கு நாட்களுக்கு நான் அந்த மேடையில் இருப்பது போன்ற நினைவே கனவில் வரும். எந்தப் பக்கம் விழுவது என்ற ஒரு திரிசங்கு நிலையில் இருந்தேன்.


இரண்டாவது நாள் நிகழ்ச்சி. என்னை அது ஏதோ ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்தது. பதினோரு மணியிருக்கும். எனக்கு எதிர்த்த வரிசையில் ஏறத்தாழ எனக்கு நேரெதிரே படுத்திருந்த ஒரு வயதான பெண்மணி உயிரிழந்தார். கோரோனாவா என்று கொஞ்சம் சந்தேகம் தான். அழுகை ஏதும் இல்லை. அதன் பின் ஓரிரு மணியளவில் என்னைப் பார்க்க வைத்தி, ரவி என் படுக்கையருகே இருந்தார்கள். ஏதோ ஒரு ‘சதி’ செய்து, அவர்கள் முதுகிற்குப் பின்னால், என் கட்டிலிலிருந்து நாலாவது கட்டிலில் ஓர் உயிர் பிரிந்திருக்கிறது. அந்தக் கடைசி நிமிடங்கள் என் கண்ணில் படாதவாறு மறைத்து நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின் இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு மூன்று பேர் வந்து அழுத போது தான் அந்த இறப்பு என் பார்வைக்கு வந்தது. ஆனால் இதில் இருந்த பெரும் அதிர்ச்சி  என்னவெனில் அந்த இரு உடல்களையும் அப்புறப்படுத்த ஐந்தாறு மணிகளாகி விட்டது. ஆள் பற்றாக்குறையோ என்னவோ…  அந்த இரு உடல்களையும் அதுவரை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியவில்லை.


நான் அங்கிருந்த நாட்களில் இன்னொரு விஷயம் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இறந்ததும் உறவினர்கள், முக்கியமாக மனைவிமார்களின் அழுகை மிக மெல்லியதாக, சில நிமிடங்களுக்கு இருக்கும். அதன்பின் அவர்களில் பலர் ஏதாவது ஒரு சுவற்று மூலையில் சாய்ந்து விசித்துக் கொண்டிருப்பார்கள். சூழ்நிலை அடக்கி வைத்து விட்டதா .. இல்லை அவர்களாகவே அடங்கி விட்டார்களா என்று தெரியவில்லை.


தொடர்ந்து நடந்து வந்த மரணங்கள்.. நானும் என்னையே அந்த மரணக் கிணற்றின் விளிம்பில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நினைவு .. எல்லாமே இணைந்து உலக  அரசுகள் அனைத்தும் வேறெந்த வேலையும் செய்யாமல் அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு, மக்கள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனாவை மட்டும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. இப்படி ஏதேதோ எண்ணங்கள் .. அவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. திருவிளையாடல் படத்தில் …

எதிலும்இயங்கும்இயக்கமும்நானே
என்இசைநின்றால்அடங்கும்உலகே..  என்று பாடியதும் அனைத்தும் உறைந்து நிற்குமே, அது போல் உலகத்தையும் ஒரு frozen stageக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் சில நினைவுகள். மூளை மந்தமாக ஆனால் வேகமாகவே வேலை செய்து கொண்டிருந்தது போலும் !!


பிள்ளைகளும், நண்பர்களும் என்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்து விட்டதைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மிகப் பெரும் நல்ல முடிவு என்பது எனக்குப் பின்னால் தான் நன்கு தெரிந்தது. ஒரு முக்கிய காரணத்தைப் பிறகு அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் சொல்ல வேண்டும். PPE உடை போட்டிருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு வெள்ளை நிறம்; மற்றவர்களுக்கு ஊதா. மணிக்கணக்காக அந்த உடையைப் போட்டிருப்பதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள், இரவில் கூட யாரும் அமர்ந்தோ, தூங்கிக்கொண்டோ இருந்ததைப் பார்க்கவில்லை. மிகச் சரியாக இரவு இரண்டு, இரண்டரை மணிக்கு வார்ட் முழுவதையும் சுற்றி ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து, முக்கியமாக ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்று தொடர்ந்து கவனித்துக் கொண்டும், ஊசி மருந்துகள் போடுவதும் என்று மிகுந்த அக்கறையோடு எல்லோரையும் கவனித்தார்கள். அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள். வழக்கமாக அரசாங்க மருத்துவ மனை மருத்துவர்கள் விட்டேற்றியாக இருப்பார்கள் என்ற நமது வழக்கமான எண்ணத்தை முற்றிலுமாக துடைத்தெடுத்து விட்டார்கள். மனமுவந்த பாராட்டுகளும், தலை தாழ்ந்த வணக்கமும் அவர்களுக்கு உரித்தாகட்டும்.


செவிலியர்களும், துப்புறவுத் தொழிலாளர்களும் நம் பாராட்டுக்குரியவர்களே. அதிலும் ’வசூல் ராஜா, எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஒரு துப்புறவு தொழிலாளர் இருப்பாரே, அதே போல் பலரும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால், பாவம் அவர்கள்… கட்டிப்பிடி வைத்தியம் பார்க்க அங்கு யாருமில்லை!

 

 











*


1106. சில மலையாளத் திரைப்படங்கள்

$
0
0




*


சமீபத்தில் வெளிவந்து இந்தியாவே திரும்பி பார்த்த8 மலையாளப் படங்கள்என்ற தலைப்பில் ஒரு பட்டியல் கிடைத்தது.     8 படங்களில் ஏழு பார்த்தாகி விட்டது. உண்மைதான். மிக நல்ல படங்கள். வெறும் காதல், சண்டை என்று அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் நிலையிலிருந்து அவர்கள் எவ்வளவு விலகி நல்ல தரமான படங்கள் எடுக்கிறார்கள். 

தமிழ்ப்பட இயக்குநர்களே … கொஞ்சம் பக்கத்து வீட்டுப் படங்களையும் எட்டிப் பாருங்களேன் .. 

பட்டியல்:

1.அய்யப்பனும்கோஷியும்

2. வரனேஅவஷ்யமுண்டு

3. ட்ரான்ஸ்

4. கப்பெல்லா

5. ஃபாரன்ஸிக்

6. ஆண்ட்ராய்டுகுஞ்சப்பன்

7. டிரைவிங்லைசென்ஸ்

8. அஞ்சாம்பத்திரா


8 படத்தில் கடைசிப் படம் தவிற ஏனைய படங்களைப் பார்த்து விட்டேன். 

ட்ரான்ஸ் -- ஏற்கெனவே பார்த்து ஒரு குறிப்பும் எழுதியுள்ளேன்.கிறித்துவ மதப் போதகர்கள் கூட்டம் செய்யும் மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். ஆனாலும்,  சும்மா சொல்லக்கூடாது நீங்கள் எவ்வளவு சரியாகச் சொன்னாலும் கிறித்துவ மத நம்பிக்கையாளர்கள் எல்லோரும் இதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் .. அவர்கள் வழியே தனி வழி. 

அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசன்ஸ்என்ற இரு படங்களின் knotஏறத்தாழ ஒன்று தான். சீருடை அணிந்த ஓர் அரசு ஊழியருக்கும் பிரபலமான அல்லது செல்வாக்குள்ள ஒருவருக்கும் ஏற்படும் சண்டையில் உள்ள ego பிரச்சனை தான். ஆனால் முந்தியது வல்லினம்; அடுத்ததோ மெல்லினம் தான். நிறைவைத் தரும் படங்கள். இரண்டிலும் பிரித்விராஜ். முதல் படத்தில் இயற்கையாக இயல்பாக நடித்துள்ளார்.

கப்பெல்லா .. நம் தமிழ்ப்படம் மாதிரி. கொஞ்சம் காதல்.. கொஞ்சம் சண்டை. ஆனால் இதில் வரும் கதாநாயக, வில்லன் பாத்திரங்களுக்குக் கொடுக்கும் வித்தியாசமான பின்புலம் கதைக்கு நல்ல வலுவைக் கொடுத்துள்ளது. 

ஃபாரன்ஸிக் .. கதாசிரியர் படித்து, உழைத்து அறிவியலோடு உருவாக்கிய கதை. A gripping story. கான்சர் வியாதி வந்தவர்களுக்கு இரண்டு வகை டி.என்.ஏ. இருக்குமாம். சாதாரண hearing aids  மூலம் மற்றவர்களை இயக்க முடியும். இப்படி அறிவியலைப் பற்றிக் கூறும் விஷயங்கள் புதியவனவாகத் தோன்றுகின்றன. 

வரனேஅவஷ்யமுண்டுகதை மெல்ல நகருகிறது. பிடித்து நம்மை நிறுத்தவில்லையே என்றிருக்கும் போது கடைசியில் நெஞ்சிற்கு நெருக்கமான காட்சிகள் வந்து நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றன. 

ஆண்ட்ராய்டுகுஞ்சப்பன்  கேரளாவின் சிறு கிராமத்தில் வசிக்கும் eccentricபெரியவர் தன்னைத் தனியே விட்டுச் செல்லும் மகனிடம் கோபத்தில் இருக்கிறார். அப்பாவின் மகன் (அந்த நடிகரின் பெயர் கூட எனக்குத் தெரியாது; தமிழ்நாட்டுக் கதாநாயக அந்தஸ்து அவருக்கில்லை!) கொடுத்த ரோபாட்டுடன் பழக ஆரம்பித்து அதுவே அவருக்கு மகனாக ஆகிவிடுகிறது. கேவலமான பிரம்மாண்டப் படங்கள் தரும் நம் இயக்குநர் சங்கருக்கு யாராவது இந்தப் படத்தை ஒரே ஒரு தடவை போட்டுக் காண்பியுங்களேன்.இதில் வரும் கதாநாயகன் நம் ரசினி மாதிரி உதட்டைச் சுழித்துக் கொண்டு “ரோபாட்” என்றெல்லாம் சொல்ல மாட்டார். கடைசி சீன் மனதை வருடி வருத்திச் சென்று முடிகிறது. அதோடு செளடாமணி என்ற அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு வரும் குறுஞ்செய்திகள் யாரிடமிருந்து என்று தெரியாமலே கதையை முடித்ததும் ( பெரியவரின் சின்ன வயதுக்காதலி அவர்!) நமது சோகத்தை அதிகப்படுத்தியது.

 

 


1107. கொரோனாவும் நானும் ... 4

$
0
0

*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

*

கைத்தொலைபேசி கையோடு இருந்ததால் நேரம் பார்க்க முடிந்தது. யார் கண்டது தேதியையும், நாளையும்? இது பற்றாது என்பதுபோல் நினைவுகளும் அப்போது அத்தனை துல்லியமாக இல்லை. நாட்கணக்கு, கிழமைக் கணக்கு என்று ஏதும் தெரியாது. இரண்டு நாட்கள் இந்த வார்டில் இருந்திருப்பேன். வேறு நல்லதொரு அறைக்கு மாற்றலாம் என்று என்னை இரண்டாவது மாடியில் உள்ள அறைக்குச் செல்ல, தள்ளு நாற்காலியில் வைத்து அழைத்துச் சென்றனர். ஒரு நடு வயது பெண்மணி அழைத்துச் சென்றார்கள். சமூக இடைவெளிக்காக மின்தூக்கி வேலை செய்யாது என்று என்னை வைத்துத் தள்ளிக்கொண்டே சென்றார்கள். பாவம் அவர்கள்.. மூச்சு அப்படி வாங்கியது. தள்ளிக் கொண்டு ஒரு ஹாலுக்குள் நுழைந்தார்கள். கீழே நானிருந்தது போலவே இதுவும் ஒரு நீண்ட ஹால்.. மத்தியில் மருத்துவர்களுக்கான சிற்றறை இங்கே இல்லை. கட்டில்கள் அனைத்தும் ஓர் ஓரத்தில் கிடந்தன.  ஒரு கட்டிலைத் தேர்ந்தெடுத்து மின் விசிறிக்கு அடியில் நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து எனக்காகத் தயார் செய்தார்கள். எல்லாம் முடிந்து நான் கட்டிலில் உட்கார்ந்ததும் ஆக்சிஜன் மாஸ்க் போட தயாராகும் போது தான் தெரிந்தது - அந்த ஹாலில் ஆக்சிஜன் கொடுப்பதற்கான வசதிகள் கிடையாது  என்பது. உடனே மீண்டும் பழைய ஹாலுக்குஏ திரும்பி வந்தோம். ஏறத்தாழ இந்த ‘பயணத்திற்கு’ 30 நிமிடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதற்குள் நான் படுத்திருந்த கட்டிலில் வேறு யாரோ “பால் காய்த்து” குடியேறிவிட்டார்கள்.

நல்ல வேளை இன்னொரு இடம் உடனே கிடைத்தது. அதுவும் முதலில் இருந்ததை விட நல்ல இடம். மருத்துவ சிற்றறைக்கு ஒட்டிய கட்டில்; முன்பு போலவே சிற்றறைக்கு மேற்கு புறத்தில் கிடைத்தது. பழைய சூழல். ஆனால் என்ன .. முன்பு கட்டிலின் இரு புறமும் என்னைப் போன்ற நோயாளிகள். இப்போது ஒரு புறம் மட்டும் அந்தத் ‘தாக்குதல்’ இருக்கும்; இன்னொரு பக்கம் மருத்துவ அறைப் பக்கம் திரும்பியிருந்து கொள்ளலாம். இன்னொரு நாள் அங்கே கழிந்தது. அடுத்து சென்றது வசதியான இன்னொரு வார்டு. அதன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டேன். எதற்கு இதை வாசிக்கும் (எண்ணிக்கையில் மிக சிலரே இதை வாசிக்கிறீர்கள்; மற்றவர்கள் எல்லோருக்கும் வாசிக்க அச்சம் போலும்!)  எல்லோரையும் அச்சுறுத்த வேண்டும்.

அந்த வார்டுக்குள் நுழைந்ததும் அத்தனை அழகாக இருந்தது அது. ஹாலிவுட் படங்களில் வரும் அமைப்பில் இருந்தது. நட்ட நடுவே மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்குமான வட்ட வடிவமான Doctors' Well. உள்ளே அவர்களுக்கான செயலிடங்கள் அழகாக இருந்தன. அந்த வட்டத்தைச் சுற்றி இன்னொரு பெரிய வட்டமாக இருந்தது. படுக்கைகளும் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன. ஏ.சி. இருந்தது. ஆனால் படுக்கைகளுக்கு நடுவே மிக மிகச் சிறிய இடம் மட்டுமே இருந்தது.அடுத்த கட்டிலில் படுத்திருப்பவரைத் தொட்டுக் கொள்ளக் கூடிய அளவில் அருகாமை. அவ்வளவு வசதியிருந்தும் கழிவறையில் இந்திய வகை மட்டுமே இருந்தது. ஜெகன் அதற்கு உடனே மாற்று ஏற்பாட்டுக்கான வழியைக் கண்டு அதை வாங்கி வந்து விட்டார். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் கோவிட் மட்டுமில்லாது அனைத்து நோயாளிகளும் இங்கு வருவார்கள் போலும்; அதனால் தான் death rate அதிகமாகக் கண்ணில் பட்டது .. சில சமயங்களில் அருகருகே…

அப்படியும் ஒன்று நடந்தது. மாலை ஒருவர் பக்கத்து கட்டிலுக்கு வந்தார். அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் வைக்க மருத்துவர்களும் உறவினர்களும் முயற்சித்தும் முடியவில்லை. நான் தூங்கி விட்டேன். திடீரென்று இரவு கண் விழித்தேன். என்னைச் சுற்றி கூட்டமாக மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்பது போல் தெரிந்தது. பிறகுதான் தெரிந்தது… பக்கத்துக் கட்டில் நோயாளிக்காக நிற்கிறார்கள் என்று.  அப்போது இரண்டரை மணி.  அவருக்கான சிகிச்சை அடுத்த நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று மருத்துவர் ஒருவர் வேகமாக ஓடி வந்து எனது கட்டிலுக்கும் அடுத்த கட்டிலுக்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் நுழைந்து CPR கொடுக்க முனைந்தார். அந்த முயற்சியில் என் கட்டிலும் சேர்ந்தே ஆடியது. எங்கே இனி சாப்பிட முடியும். சிறிது நேரத்தில் கட்டில் ஆடியதும் நின்றது; அவரது வாழ்வும் முடிந்தது.

நல்ல வேளை. இது நடந்து முடிந்த அடுத்த நாள் காலை மறுபடி என்னை பழைய green zone வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். இம்முறை மருத்துவச் சிற்றறைக்குக் கிழக்குப் பக்கம், அந்த மருத்துவ அறைக்குப் பக்கத்திலேயே கட்டில் கிடைத்தது. இதில் அடுத்த இரு நாள் கழிந்தது. ஏனோ இப்பகுதி அமைதியாகவும், அதிக இழப்பும் இல்லாமல் இருந்தது. என்னால் இப்போது ஓரளவு ஆக்சிஜன் இல்லாமல் இருக்க முடிந்தது. தேவையான நேரத்தில் வைத்தால் போதும் என்பது போல் இருந்ததால் பக்கத்து கட்டில் நடப்புகளையும் பார்க்க முடிந்தது.

பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சுற்றி நடந்தன. இதே வார்டில் இரு நாட்களுக்கு முன் நானிருந்த போது பக்கத்து கட்டிலில் இருந்த கணவன் மனைவி இருவரிடமும் யாரோ ஏஜென்ட் ஒருவர் ஒரு மருத்துவமனையைப் பற்றிச் சொல்லி, 4 லட்சம் வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது என் உடல் அந்த அளவு நன்றாக இல்லை. அவர்களிடம் நான் ஏதும் பேசவில்லை. ஆனால் இப்போது உடல் கொஞ்சம் நலமாக இருந்ததால் இரண்டாவது  கட்டிலில் இருந்த ஒரு தம்பதியிடம் நடந்த உரையாடலைக் கேட்க முடிந்தது. ஒரு ஆட்டோரிக்‌ஷா ட்ரைவர் வந்து பேசியிருப்பார் போலும். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கொடுத்தால், சுகமாக்கி விடுவார்கள் என்று கூறியிருப்பார் போலும். கணவனுக்குத்தான் உடல் நலமில்லை; இளம் வயது தான். அவரின் மனைவி கடன் வாங்க தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அளவு வசதியில்லாத ஆட்கள். கடனுக்காக அலை மோதிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முடிவு தவறாகப் பட்டது. அந்தப் பெண்ணை அழைத்து உங்கள் முடிவு சரியில்லை; அவருக்கு இன்னும் கட்டாயம் ஆக்சிஜன் தேவைப் பட்டது. அதுவே அந்தப் பெண்ணுக்கான கவலை. அவரிடம் நான் இரு நாட்களுக்கு முன்பு அதே நிலையில் இருந்தேன். அதே போல் அவருக்கும் சுகமாகிவிடும். மருத்துவம் மிகவும் சரியாகச் செய்கிறார்கள். யாரோ சொன்னதை நம்புவதை விட இங்கே இத்தனை பேர் மருத்துவம் பார்க்கிறார்களே அவர்களை நம்புவது மேல் என்று சொல்லி விட்டு, ஆனால் முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கும் என்று நம்பினேன். அவர்களிடம் பேசிய சில மணி நேரங்களில் என்னை மூன்றாவது மாடியில் உள்ள தனி அறைக்கு எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளை இப்போது மின் தூக்கி வேலை செய்தது. அங்கே தனி அறை. ஒரு மாலையும் இரவும் அங்கே தங்கியிருந்தேன். அங்கேயும் தொடர்ந்து மருத்துவக் கவனிப்பு இருந்தது. வழக்கமாக இரவு இரண்டிலிருந்து இரண்டரை மணிக்குள் மருத்துவர்கள் வந்து ஆக்சிஜன் அளவு அல்லது ஊசி மருந்து கொடுப்பது என்று கவனிப்பார்கள். இங்கும் அதே கவனிப்பு இருந்தது.

அடுத்த நாள் காலையில் இன்று வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். (இதன் தொடர்ச்சி முதல் கட்டுரையில் …)

வீட்டிலும் ஆக்சிஜன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் இரண்டு மூன்று நாள் அவ்வப்போது அது தேவையாக இருந்தது. இரவு நேரமாகினும் மகள் உதவியோடு சிறிது நேரம் தேவைப்படும் போது வைத்துக் கொண்டேன். சிறிது நடந்தாலும் ஏறத்தாழ 15-20 நிமிடத்திற்கு மூச்சு வாங்கும். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்குது என்பார்களே, எனக்கு வயிற்றுக்குள் பெருச்சாளி ஓடும். நாளாக நாளாக பெருச்சாளி மெல்ல எலியாக,மூஞ்சூராக மாறியது.

ஆனாலும் அனைத்து மருத்துவர்களும் என் வயதைக் காரணமாகச்சொல்லி முழுமையான குணம் பெற இரண்டு மூன்று மாதங்கள் எடுக்கும் என்று கூறியுள்ளார்கள்.

வண்டியைத் தள்ளிச் செல்ல வேண்டும்…..


(என் 3வது கட்டுரையை அதிகமாக யாரும் வாசிக்க விழையவில்லை போலும். ‘எத்ற்கு இந்தக் கழுதையை வாசிக்க வேண்டு’மென்று நீங்கள் நினைத்திருக்கலாம். அதனால் சிறிது விவரணைகளைச் சுருக்கி இதோடு முடித்துக் கொள்கிறேன்.

முக்கியமாக இதை எழுத இரு காரணங்கள்:

வீட்டோடு முழுமையாக இருந்தும் எனக்கு வந்து விட்டது -- 

1. கொரோனாவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

2. அரசு மருத்துவ மனையில் நான் பெற்ற மருத்துவம் முழுமையாகவும், சிறப்பாகவும் இருந்தது. 

3. ஆனால் தனி மருத்துவ மனைகளுக்கு இது ‘காசு பார்க்கும்’ நேரமாக ஆகிவிட்டது. ஒரு ஊசி 60,000 ரூபாய் என்று மூன்று ஊசி போட்டு முதல் 3 நாளிலேயே நண்பர் ஒருவரிடம் இதற்கான 1.80,000  வாங்கி விட்டார்கள். எனக்கும் முதல் நாள் போட்ட ஊசி கொஞ்சம் விலை அதிகமானது என்றார்கள். ஆனால் இப்படி ஒரு பகல் கொள்ளை அங்கு ஏதுமில்லை. நானும் யோசித்துப் பார்த்தேன்... 60,000 ரூபாய்க்கு ஒரு ஊசி. ஒரு வேளை உலகிலேயே மிக அதிகமான விலையுள்ள PLACEBO  என்ற மருந்தாக இருக்குமோ? (PLACEBO பொருள் தெரியாதவர்கள் அகராதியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.  இதுபோன்ற பகல் கொள்ளைகள், ஏஜெண்டுகள் என்பவையிலிருந்து சிலர் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற காரணத்தால் இதை எழுதினேன். கசப்பாக, நீண்டதாக போனமைக்கு மன்னிக்கவும்.)

 




*

1108. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 7

$
0
0

                             (Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
                                                           in Codex Sinaiticus.             
                        

வரலாறு மிகவும் முக்கியம், நம்பிக்கையாளர்களே!

 

பொதுவாக, எனது கிறித்துவ மதக் கட்டுரைகளை “பெரிய” நம்பிக்கையாளர்கள் வாசிப்பதில்லை. இருப்பினும் இந்தக் கட்டுரையை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நிச்சயமாக ஒரு சாதாரண கிறிஸ்தவனுக்கு, கிறிஸ்துவ நம்பிக்கையாளனுக்கு கீழ்க்கண்டவை அனைத்துமே நிச்சயமாக மிகப் புதியதாகவும், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடியவைகளாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த வேண்டுகோளின்படி வாசிப்பவர்கள் அனைவரும் பெரிய மனது செய்து இதில் சொல்லிய விஷயங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களா  அல்லது தெரியாதவைகளா என்று மட்டும் சொன்னால் அது என் புரிதலுக்குத் துணையாக இருக்கும். 

இக்கட்டுரையில் நூலாசிரியர் மாற்கு 16:9-20 என்ற வசனங்களில் 16:8 மட்டுமே உண்மையான வசனங்கள் என்றும், 9-20 வசனங்கள் பிற்சேர்க்கை என்கிறார். அதை உறுதிப் படுத்த நானும் சில ஆய்வுகளைச் செய்தேன். ஆய்வுகளில் கிடைத்த செய்திகளை இக்கட்டுரையில் நடுவே நான் தந்துள்ளேன்.

 

இயேசுவின் திருத்தூதர்களாகிய அப்போஸ்தலர்களும் அவர்கள் செய்த பணிகளும் (65) 

இயேசு தன் அப்போஸ்தலர்கள் /திருத்தூதர்களான பன்னிருவரையும் அனுப்புகையில் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும் காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டாரிடத்தில் போங்கள்”. (மத் 10:5,6) 

அதாவது, இயேசுவும் புறஜாதியாரிடம் போகவில்லை; தம்முடைய சீடர்களும் அவர்களிடம் சென்று பணியாற்ற இயேசு அனுமதிக்கவில்லை. ’மெசியா’ என்பவர் இஸ்ரேயலர்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.(66) 

நம்புகிற யூதர்களும் நம்பாத யூதர்களும்

’கிறிஸ்து’ , மற்றும் ‘கிறிஸ்தவர்’ என்னும் சொற்கள் கி.பி. 49க்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தன. இந்தச் சொல்லைப் பயன்படுத்தியவர், 36 வாக்கில் பைபிளில் அறிமுகமாகிற பவுல் என்பவர் ஆவார்.

இயேசுவை புற ஜாதியாருக்கும் அறிமுகப்படுத்திட வேண்டும் என்ற பவுலின் தீர்மானத்துக்குப் பின்னரே இந்த இரு சொற்களும் பயன்பாட்டுக்கு வந்தன.(67)

மெசியா செய்ய வேண்டிய பணிகளுள் எதையும் இயேசு செய்யவில்லை என்பதால் இயேசுவை மெசியா என நம்பாதவர்கள் ‘நம்பாத யூதர்கள்’ஆயினர். பழைய ஏற்பாடு அறிவிக்கும் மெசியா இன்றுவரை வரவில்லை என்றும், விரைவில் வந்து விடுவார் என்றும் இன்றுவரை அவர்கள் நம்பி காத்திருக்கிறார்கள். இன்றைய யூதர்கள் அவர்களே; அவர்களுடைய மதம் யூத மதம். அவர்களுக்கு என சொந்தமாக யெகோவா என்ற கடவுள் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு நூல்களில் யூதர்கள் இழந்த நாட்டினைத் திரும்பப் பெறுதல் என்பதே “விடுதலை” அல்லது “இரட்சிப்பு” எனப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டில் அது ”பரலோக ராஜ்ஜியம்” என்று கடவுள் சார்ந்த விஷயமாக மாற்றப்பட்டது. (68)

அதனால் தான் இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட காலத்தில் கூட, தங்களுடைய நாட்டின் விடுதலை எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்றுதான் அவரிடம் விசாரித்தார்களே தவிர, ”ஆன்மீக விடுதலை” பற்றி அம்மக்கள் பேசவில்லை. (அப். நட. 1:6) (69)

யூதர்களுக்கு மட்டும் மெசியாவாக இருந்த இயேசு பின்பு புறஜாதியினர் நலனில் அக்கறை கொண்டவராக மனம் மாறியதாகவும், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் தன்னுடைய நற்செய்தியை அறிவிக்குமாறும்” தன் சீடர்களுக்கு கட்டளை இட்டதாகவும் பைபிளில் எழுதப்பட்டுள்ளது. (மாற் 16:15)  ஆனால் மாற்கு 16:9-20 வரை உள்ள 12 வசனங்கள் உண்மையானவை அல்ல என்றும், Codex Sinaiticus, Codex Vaticanus ஆகிய முக்கியமான பைபிள் பிரதிகளில் இந்த வசனம் இல்லை என்றும், பிற்காலத்தில் யாரோ எழுதி இவற்றைச் சேர்த்துள்ளனர் என்றும் அறிகிறோம். .. (இதற்கான மேல் விவரங்களுக்குக் கீழே சில இணைய தள முகவரிகளைத் தந்துள்ளேன். பழைய பைபிளின் படங்களும் 16:9-20 இல்லாத பகுதிகளும் அதில் உள்ளன. ஆனாலும் இந்த கிறித்துவ இணைய தளங்கள் இதில் கொஞ்சம் “மழுப்பு வேலை” செய்வதாகவே வாசிக்கும் போது எனக்குத் தோன்றியது.)தமிழ் புரோட்டஸ்டாண்ட் மொழி பெயர்ப்பு, கத்தோலிக்க மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் இந்த வசனங்கள் இல்லை. ஏமாந்து போன சீடர்கள் இதனால் இரண்டாம் வருகைக் கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். (யோவான் 16:20) (73) 

உடனே நடக்கும், தங்கள் வாழ்நாளிலேயே கிடைத்துவிடும் (மாற்கு 9:1; மத் 16:20) என்று சீடர்கள் நம்பியிருந்தும் இரண்டாம் வருகை இன்னும் நடைபெறவில்லை.(74)

 பவுலின் அறிமுகம் அல்லது மனமாற்றம், அப்போஸ்தலர் எனப்பட்ட திருத்தூதர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியது, எருசலேம் சங்கக்கூட்டம்,  பழைய ஏற்பாட்டை அவர் ரத்து செய்தது, அதனால் இயேசுவின் உண்மையான சீடர்களோடு ஏற்பட்ட மோதல், இவற்றால் எழுந்த புதிய சூழ்நிலை காரணமாக பரலோக வாழ்வு இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே உண்டு என இயேசுவின் சீடராகிய யோவான் நூல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் …  இவையெல்லாம் பைபிள் வரலாற்றில் ஒரு பின் இணைப்பாகவே உள்ளன. (75)

பவுல்மனமாற்றமும்அதிலுள்ளமுரண்பாடுகளும்

அப். நட. 26:12-14; அப்.நட. 9:3-7; அப்.நட. 22:9  -- இரண்டாவது வசனத்தில் கடவுளின் குரலைக்கேட்டவர்களால், மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ள வசனத்தில் குரலைக் கேட்க முடியாமல் போயிற்று.

யூதர்கள் இயேசுவை மெசியா என ஏற்க மறுத்துவிட்டனர். எனவே புறஜாதியாரிடமாவது அவரைப் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்பதே பவுலின் கொள்கையாக இருந்தது. (80)

கி.பி 49ல் எருசலேம் சங்கம் (The Council of Jerusalem) கூடி புறஜாதியினரிடம் இயேசுவைப் பிரச்சாரம் செய்யலாம் என பவுலுக்கு ஒப்புதல் வழங்கியது. அதன் பின்னரே கிறிஸ்து என்ற சொல்லை பவுல் பயன்படுத்தினார். (82)

 எருசலேம் சங்கக் கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. அதில் யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி பேதுருவுடையது; புறஜாதியினருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைத் தாமே செய்ய வெண்டும் என எருசலேம் சங்கம் முடிவு செய்ததாக பவுல் எழுதினார். (கலாத்தியர் 2:7) புற ஜாதியாருக்கு விருத்தசேதனம் தேவையில்லை என ஒரு சலுகையாக வழங்கப்பட்டது.

பின்பு பவுல் பழைய ஏற்பாடே தேவையில்லை என்று பிரச்சாரம் செய்தார். (அப்.நட. 21:20,21) இதனால் மீண்டும் பல சண்டைகளும் ஆரம்பித்தன.(87) 

புதிய ஏற்பாட்டில் 27 நூல்கள் உள்ளன. அவற்றில் 14 கடிதங்கள் பல்வேறு தரப்பினருக்கும் பவுல் எழுதியவை. இரண்டு லூக்கா எழுதியவை.  மேற்கண்ட  நூல்களில் இயேசுவை ஜாதிய எல்லைக்குள் இருந்து வெளியே மீட்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூல்களை எழுதிய பவுலும் லூக்காவும் இயேசுவுக்கு நேரடியாக தொடர்பில்லாத அந்நியர்கள். இருவரும் அவரைப் பார்த்தது கூட இல்லை. இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் சொந்தக் கொள்கைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

தாயின் வயிற்றில் இருந்தபோது என்னை தமக்கென ஒதுக்கி வைத்து தனது அருளால் என்னை அழைத்த கடவுள் என்று பவுல் எழுதியுள்ளார். (கலாத்தியர் 1:15,16) பின் ஏன் கி.பி. 36 வரை அவர் இயேசுவிற்கு எதிராக படை நடத்தினார்?

அப்.நட. 21:21-24; அப். நட. 21:26 - வசனங்கள் நமக்குப் பல செய்திகளை தருகின்றன.(90)

 

பவுல் - விருத்த சேதனம்

ஆதியாகமம் 17.9-11 - விருத்த சேதனத்தின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. ஆனால் பவுல் ரோமர் (2:26-29)  உள்ளத்தால் செய்யும் விருத்த சேதனமே சிறந்தது என்கிறார்.                             மேலும் கலாத்தியர் (5:2) - விருத்தசேதனம் செய்து கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை என்கிறார்.

தம் பணிக்கு இடையூறாக இருந்த விருத்தசேதனம், மோசேயின் சட்டம் மற்றும் பழைய ஏற்பாட்டை ரத்து செய்தால் மட்டுமே பிறகு ஜாதியினரிடம் இயேசுவை பிரச்சாரம் செய்வது சாத்தியமாகும் என அவர் கருதினார். இந்த மாற்றத்தை அவரால் நிறைவேற்றவும் முடியவில்லை.ஆனால் மற்றொரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். மெசியாவை கிறிஸ்துவாக மாற்றினார். (93)

 

கிரேக்கத்தில் “கிறிஸ்டோஸ்” (Christos) என்ற சொல் ஜாதிகளைத் தாண்டிய “எல்லோருக்கும் ஏற்புடைய கடவுள்” என்ற பொருள் கொண்டதாகும். இயேசுவை’கிறிஸ்து; என்று அறிமுகம் செய்தார். இதற்கு சீடர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.ரோமர் 1:2-5 வசனங்கள் மூலம் ஒரு சமரச ஏற்பாட்டிற்கு முயன்றார்.

 

இயேசு தன் இறப்பிற்குப் பின் கிறிஸ்து ஆகி விடுகிறார். அவரே அனைவருக்கும் உரியவர். “கிறிஸ்துவுக்கே தாம் பணியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேனே தவிர, மெசியாவுக்கல்ல என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார். தனது நற்செய்தியிலும் இயேசுவின் சாதனை, போதனை பற்றி பவுல் பேசமாட்டார். இயேசுவின் மரணத்திலிருந்து தான் தொடங்குவார்.  தமக்கு  எதிராகப்   பிரிந்துள்ளவர்களிடம் வன்முறைப் பிரயோகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறினார்.(1 கொரிந்தியர் 4:21) (96)    

 

இயேசு மரணத்திற்குப் பின் கிறிஸ்துவாக மாறினார். அந்த இரண்டாவது இயேசுவே தம்முடைய இயேசு என்று பவுல் தெளிவுபடுத்தினார். (2 கொரிந்தியர் 11:4,5)                              

 

******

மாற்கு 16:9-20 பற்றிய சில கட்டுரைகளின் இணைய தள முகவரிகள்:

http://www.curtisvillechristianchurch.org/MarkOne.htm  - 

Codex Vaticanus does not contain Mark 16:9-20 but following Mark 16:8 and preceding Luke 1:1 it contains prolonged blank space, including an entire blank column. (Fig:1)

 


                                         (Fig:1) இப்படத்தில் 16:8 வசனங்களுக்குப் 

                     பின் சில வெற்றிடங்கள் உள்ளன.


(Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
in Codex Sinaiticus
.

http://apologeticspress.org/apcontent.aspx?category=13&article=704

One textual variant that has received considerable attention from the textual critic concerns the last twelve verses of Mark. Much has been written on the subject in the last two centuries or so. Most, if not all, scholars who have examined the subject concede that the truths presented in the verses are historically authentic—even if they reject the genuineness of the verses as being originally part of Mark’s account

********

https://www.thegospelcoalition.org/article/was-mark-16-9-20-originally-mark-gospel/  

 For example, between 16:8 and 16:9, the ESV includes these words: “Some of the earliest manuscripts do not include 16:9–20.”

Christians have known for centuries that Mark 16:9–20 might not have originally been part of Mark’s Gospel.

One brother in Christ, a monk named Ephraim who lived in the 900s, we still have several manuscripts he made. Some still have his signature. We can identify others by his handwriting and craftsmanship. Ephraim wasn’t the original author of these particular words. He regularly copied marginal notes that were already in the manuscripts he was using, and this note was one of them. And Ephraim’s manuscript isn’t the only copy of Mark that has this note between 16:8 and 16:9. There are at least 11 others in Greek. The note probably predates 10th-century Ephraim by a few hundred years.

One important fourth-century Old Latin manuscript has a short addition after verse 8 and then ends without verses 9 to 20. A valuable Old Syriac manuscript from the fourth century also ends Mark at 16:8. A Sahidic Coptic manuscript (probably from the fifth century) ends Mark’s Gospel at 16:8 as well. In 1937, E. C. Colwell identified 99 Armenian manuscripts of Mark (of 220 surveyed) ending at 16:8, and a further 33 containing 16:9–20 but with notes expressing doubt about the verses’ authenticity.

****** 

புதிய ஏற்பாடு எழுதப்படுதல்

கி.பி. 52 வாக்கில்தெலோனிக்கருக்கு தம் முதல் கடிட்தத்தை பவுல் எழுதினார். காலத்தால் முதலில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு நூல் இதுவே. அதனைத் தொடர்ந்து தம்முடைய 14 கடிதங்களையும் பவுல் கி.பி. 65க்குள் எழுதி முடித்து விட்டார். ஆனால் இயேசுவின் திருத்தூதர்களோ அல்லது மற்றவர்களோ, இதுவரை புதிய ஏற்பாட்டு நூல்கள் எதனையும் எழுதத் தொடங்கிருக்கவில்லை.

பவுலின் நூல்களில் மூன்று விஷயங்கள் தெளிவாக அழுத்தம் விட்டிருந்தன: 

·         விருத்த சேதனம்,  திருச்சட்டம்,  பழைய ஏற்பாடு ஆகியவை தேவையில்லை. (அப். நட.21:28; ரோமர் 10:4; மற்றும் 7:6) 

·         உயிரோடு வாழ்ந்த காலத்தில் இயேசுவில் தூய ஆவி இல்லை. அவர் மரணம் அடைந்த பின்னரே அவரில் பரிசுத்த ஆவியாகிய தூய ஆவி இறங்கியது. அதனாலேயே அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார். (2 திமோத்தேயு 2:8,9;  மற்றும் 2 கொரிந்தியர் 11:4,5; மற்றும் 5:15,16) 

·         இயேசுவை ’கிறிஸ்து’ எனவும், மரணத்துக்குப் பின் கிறிஸ்துவாக மாறிய பின்னரே அவர் அனைவருக்கும் உரிய கடவுள் ஆனார் என நிறுவினார். (1 கொரி 2;2) 

இக்கொள்கைகளை உண்மையான சீடர்கள் மறுத்தனர். இதனால் அவர்கள் நற்செய்தி நூல்களை எழுதினர். கி.0இ. 66ல் மாற்கு முதலாவதாக எழுதினார். லூக்காவைத் தவிர ஏனைய 3 பேர்களும் பவுலுக்குப் பதில் சொல்லுவதற்காகவே நூல்கள் எழுதினார்கள். அப்பதில்களில் முக்கியமானவை:

  1. 1.    மத் 5:17-19 - உலகம் அழியும்வரை பழைய ஏற்பாடு அழியாது என்றும், பவுலின் பிரச்சாரம் இயேசுவின் கொள்கைகளுக்கு மாறானது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.(98)
  2. 2.    எசாயா 7:14 இந்த இறைவாக்கு கி.மு. 700 யூதேயா நாட்டு ஆகாஸ் மன்னனுக்காகச் சொன்னது. மெசியாவிற்கு உரியதல்ல. ஆனால் இதை அவ்வாறு மாற்றி எழுத சீடர்கள் துணிந்தனர். இதனால், இயேசுவின் பிறப்பின் மீதுள்ள மர்மம் நீங்கும்; பிறக்கும்போதே இயேசுவின் பரிசுத்த ஆவி இருந்ததாக நிறுவ முடியும். இயேசு பிறந்ததும், திருமுழுக்கு பெற்ற பொது அவரில் பரிசுத்த ஆவி இறங்கியதாகவும் மத்தேயு எழுதுகிறார். (மத் 1:18; மத் 3:16)
  3. 3.    இயேசுவே மெசியா, கிறிஸ்து அல்ல என்றனர் சீடர்கள். (99) மத் 10:5,6; யோவான் 4:6-9; யோவான் 4:16-18; மத் 15:25;  மத் 15:24; போன்ற வசனங்கள் இயேசு சமாரியர்களை வெறுத்தார் எனவும், இஸ்ரேயலியர்களுக்காகவே கடவுளால் அனுப்பப்பட்டிருப்பதை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.(101) 

திருத்தூதர்கள் என்னும் அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. இருந்தும் பவுல் தன்னைத்தானே அப்போஸ்தலர் என அறிவித்துப் பலருக்கும் கடிதம் எழுதுகிறார். அக்கடிதங்களின் முதல் அதிகாரத்தின் இரண்டு வசனங்களைப் படித்தால் அவர் தம்மை ஒரு திருத்தூதனாக முன்னிலைப்படுத்தியிருப்பதைக் காணலாம். (103) இந்தக் காரியத்தை வைத்து யோவானும் பவுலும் தங்கள் எழுத்துகள் மூலம் பொருதிக்கொள்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சி திருவெளிப்பாடு 2:2; 1 கொரிந்தியர் 9:2 என்பதில் இருப்பதை நூலாசிரியர் விளக்குகிறார். (104)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



1109. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 8

$
0
0

பைபிள்கருத்துகள்

ஓர்அலசல்

 

பெண்ணடித்தனம்:

கலாத்தியர் 3:28 -’ஆண் பெண் வேறுபாடு இல்லை” என்று கூறியிருந்தாலும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்றே பைபிள் போதிக்கின்றது. (105)

கலாத்தியர் 4:30 - அடிமைப் பெண் உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக் கூடாது.

1 திமொத்தேயு 2:11-14 - முதலில் உண்டாக்கப்பட்டது ஆதாம்; பிறகுதான் ஏவாள்.

இயேசுவுக்கு நெருக்கமாக இருந்த பணியாற்றியது பெண்களே. அவர் சிலுவையில் இறந்ததும் ஆண் சீடர்கள் தத்தம் தொழிலுக்குத் திரும்பி விட்டனர்.(யோவான் 2:2,3)சிலுவையில் அடியில் தொடர்ந்து இருந்தவர்களும், மூன்றாம் நாள் கல்லறைக்குச் சென்று முதலில் பார்த்தவர்களும் பெண்களே. ஆனால் ஒரு பெண்ணைக் கூட தன் அப்போஸ்தலர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கவில்லை. பரலோக ராஜ்ஜியத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட போது பெண்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. (மத்தேயு 19:28)

சாத்தானும் பரிசுத்த ஆவியும்:

கி.மு. 586க்கு முன்னால் “பரிசுத்த ஆவி” என்ற சொல் பழைய ஏற்பாட்டில் இல்லை.

புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “the Spirit of God” என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.(107)

கி.மு.586க்குப் பிந்தைய நூலாசிரியர்கள் தான் சாத்தானை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள். … சாத்தான் பற்றிய கொள்கை பாரசீக ஜொராஸ்ட்ரிய மதத்திலிருந்து பெறப்பட்டதாகும். (108)

பழைய ஏற்பாட்டில் சாத்தானுக்கும் கடவுளுக்கும் பகைமை இருந்ததாக எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. கடவுள் நடத்தும் அரசாங்கத்துக்குரிய படைவீர்ர்களாக வானதூதர்கள் (Commander of the army of the Lord) இருந்ததை அறிகிறோம்.(யோசுவா 5:14)

கிருபையும் செயல்களின்படி அமைகின்ற வினைப்பயனும்:

பைபிளில் கிருபை - mercy - என்ற சொல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆதியாகமக் 17:7 - ஆபிரகாம் சந்ததியினருடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி எல்லாக் காலத்திலும் அவருடைய சந்ததியினாருக்கு மட்டுமே அவர் கடவுளாக இருப்பார்.

புதிய ஏற்பாட்டு பவுலுக்கு   இயேசுவை புறஜாதியாரிடம் எடுத்துச் செல்ல முடியாத நிலையில், … பவுலுக்குக் கிடைத்த ஒரு புதிய வழிமுறைதான் “கிருபை” என்னும் பேரிரக்கம்.

புறஜாதியாரைப் பழி வாங்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அக்கடவுள். (எரோமியா 51:24;  செப்பானியா 3:19) இந்நிலையில், புறஜாதியினரை எப்படியாவது அவருடைய் பக்தர்கள் ஆக்கிவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் புனையப்பட்டதே இந்த ‘இரக்கம்’. (111) இச்சொல் மதம் மாற்றுவதற்குத் தேவைப்பட்ட சொல்லே தவிர வேறல்ல.

இயேசுவின் இரத்தமும் பாவ மன்னிப்பும்:

காயின் ஆபேலைக்கொன்ற பிறகு நோது நாட்டுக்குச் சென்று அங்கே ஒரு பெண்ணை மணந்து கொண்டான். அவர்களுக்கு ஏனொக்கு என்ற பிள்ளை பிறந்தது. அப்படியானால், ஆதாம் ஏவாள் தவிர்த்து பூமியில் பிற நாடுகள் இருந்தன. அங்கு எண்ணற்ற மக்களும் இருந்துள்ளனர். இவர்கள் யாரும் பைபிளின் கடவுளல் படைக்கப்பட்டிருக்க முடியாது. ஆதாம் ஏவாளின் சந்ததியின் இருபதாவது தலைமுறையில் இஸ்ரவேலர் தோன்றினார். இஸ்ரவேலின் சந்ததியர்களே இஸ்ரேயலியர்களாக, யூதர்களாக, 12 ஜாதியினராக ஆனார்கள். ஏனையோர் புறஜாதியினர்.  …தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்னினார். (அப். நட். 13:23) (113)

பரலோக ராஜ்ஜியமும் புறஜாதியாரும்:

கி.மு. 586-ல் யூதேயா நாடு பாபிலோன் மன்னனாகிய நெபுகாத் நெசாருக்கு அடிமையாகிப் போனது. அதனால் அவர்களுடைய கடவுளால் எருசலேமில் குடியிருக்க முடியாமல் போயிற்று. (!!!!)  (எசேக்கியல் 19:4,19,19) (115)

இதன்பின் கி.மு. 538-ல் பாரசீகர்களுக்கும், கி.மு. 332-ல் கிரேக்கர்களுக்கும், கி.மு. 142-ல் ஹாஸ்மோனியர்களுக்கும், கி.மு. 63-ல் ரோமானியர்களுக்கும் என மாறிமாறி யூதநாடு புறஜாதியினருக்கு அடிமையானது.

இதன் பின்னால் நடக்கப் போகும் நிகழ்வுகள் பற்றி யோவானுக்கு ஒரு தரிசனம் மூலமாகக் கடவுள் முன்னறிவித்ததாக எழுதப்பட்டுள்ளது. அதில் அரியாசனத்தில் இருக்கும் கடவுள் வீற்றிருந்தார். … பரலோக ராஜ்ஜியத்துக்கும்ப் போவதற்குத் தகுதியுடையவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கடவுளிடம் இருந்தது. 1,14,000 பேர்களின் பெயர்கள் மட்டுமே அதில் எழுதப்பட்டிருந்தன. அனைவரும் இஸ்ரேயலர்களின் 12 ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஜாதிக்கும் 12,000 பேர்கள்.(திருவெளிப்பாடு 7:4-8) அப்போ புறஜாதியினரான நமக்கெல்லாம் அங்கே இடமே இல்லையா?அவர்கள் … புதுப்பாட்டைப் பாடினார்கள். அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும்கற்றுக் கொள்ளக் கூடாதிருந்தது. (திருவெளிப்பாடு 14:3)

திருவிளையாடல் படத்தில் தருமி “அய்யோ.. ஆயிரம் பொன்.. எனக்குக் கிடைக்காதா என்று அங்கலாய்த்து அரற்றுவார். அதைப் போல் தான் புறஜாதி மக்கள் அனைவரும் அரற்ற வெண்டும் போலும். ஏனெனில் 

1.பரலோக ராஜ்யம் 1,44,000 யூதர்களுக்கு மட்டும் தான் என்று திருவெளிப்பாட்டில்(பைபிளில்) கூறப்பட்டுள்ளதே. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

தேவ வாக்கியம் பொய்யாகுமா?

2. இயேசு இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாகப் பல இடங்களில் வேதாகமத்தில் சொல்லியுள்ளது. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

3. வரலாற்று பூர்வமாக கிறித்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் நடந்த மாற்றங்கள் , திரிபுகள் பற்றி விளக்கமான ஆய்வறிக்கை கொடுத்தாலும்  ... அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

சிறு வயதில் கொடுக்கப்பட்ட விசுவாசத்தைக் கை  விடாமல் பயணிக்கும் வழியைப் பற்றி ஆயிரம் ஆய்வுகள் கொட்த்தாலும்  ...அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

*******





இந்த நூலின் கருத்துரைகள் இப்பதிவோடு முடிவடைகிறது.


.

1110. பல்லாண்டுகளுக்கு முன் கேட்ட கேள்வி

$
0
0



*

அமெரிக்கன் கல்லூரியில் பணி செய்யும்போது ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்தில் இரு நாட்களுக்கு retreat இருக்கும். யாரேனும் ஒரு கிறித்துவக் கல்வியாளர் வந்து இரு நாட்களுக்கும் எங்களுக்கு ஊக்கமூட்டும் விதத்தில் நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பேசுவார்கள். கிறித்துவம், கல்வி, மாணவர்கள் என்று அவர்களது பேச்சு பலவற்றையும் தொட்டுச் செல்லும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இதைவிட குடும்பங்கள் பல ஒன்று சேர்வோம். அதுவும் நேரத்தை இனிமையாக்கும். முதலில் வைகை அணைப் பகுதி போன்று ஆரம்பித்து அதன் பின் கொடைக்கானல் என்று இடம் மாறியது. அங்கும் முதலில் செண்பகனூரில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் கல்லூரியில் நடந்து, அதன்பின் கொடைக்கானலில் ஏரிக்கரையோரம் உள்ள அமெரிக்கப் பள்ளியில் நடைபெறும்.

இடம் கொடைக்கானலுக்கு மாறிய பின் நான் தவறாது அங்கு சென்று விடுவேன் - அந்த அளவு கொடைக்கானல் போவது பிடிக்கும். துணைவியார் பணியில் சேர்வதற்கு முன் குடும்பத்தோடும், அதன் பின் அவர்களது வசதியைப் பொருத்து குடும்பத்தோடு, அல்லது தனியாகவாவது ஓடி விடுவேன்.

ஓராண்டு ஏரிக்கரைப் பள்ளியில் குடும்பத்தோடு செல்லாமல் தனியாகச் சென்றிருந்தேன். அதே போல் தனியாக வந்திருந்த மூன்று நண்பர்களோடு அதிக நேரம் கழிந்தது. அதுவும் அவர்களில் தோமினிக் அண்ணனும், ஐசக் பயலும் கொஞ்சம் பக்திமான்கள். மீனாட்சி சுந்தரம் என்ற பிரெஞ்சு பேராசிரியருடனும்ம் என் காமிரா பொட்டியை எடுத்துக்கொண்டு பகலில் ஏரிக்கரைப் பக்கம் சுற்றிவிட்டு  வருவோம். (மூவரும் இப்போது இல்லை..)

அந்த ஆண்டு எங்களுக்கு வந்த சிறப்புப் பேச்சாளரைப் பற்றிக் கேள்விப்பட்ட போதே ஆச்சரியாக இருந்தது. இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இறையியல் கல்லூரி ஒன்றில் முதல்வராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். பகலில் ஊர் சுற்றப் போனாலும் மாலை ஆறு மணிக்குமேல் வெளியே குளிருமல்லவா .. ஆகவே ஒழுங்காக உள்ளே அமர்ந்து விரிவுரையைக் கேட்பேன். அன்றைய பேச்சு கிறித்துவின் வாழ்க்கை பற்றி இருந்தது. பேச்சு முடிந்த பின் கேள்வி நேரம். பல நாளாக மனதிற்குள் இருந்த ஓர் ஐயம் - கிறிஸ்து கடவுளா அல்லது கடவுள் அனுப்பிய மெசையாவா என்று. சரி .. கேட்டு விடுவோமே என்று நினைத்து, எழுந்து, Sir, is Jesus a god? என்று கேட்டேன். ஓர் இறுக்கம் வந்தது போலிருந்தது. ஆனால் சிறப்புப் பேச்சாளர் மிகவும் அதிர்வான பதிலை வெகு வேகமாக, என் கேள்வி முடிந்த அடுத்த கணத்தில், No  என்றார். கொஞ்ச நேரம் அமைதி. பின் எனக்கு இரு வரிசைகளுக்கு முன்னால் இருந்த ‘மாப்பிள்ளை’ ஸ்டான்லி ஜெயசிங் - கணக்குப் பேராசிரியர் - தடாரென்று எழுந்தான். ‘ஏண்டா இங்கே வந்தாய்?’ என்று திரும்பிப் பார்த்துக் கோபமாகக் கேட்டான். அவனும் நானும் எப்போதும் வாடா .. போடா … உறவு தான். என்னை எப்போதும் மாப்பிள்ளை என்று தான் முதலிலிருந்தே அழைப்பான். அதனால் அவன் கோபம் பெரிதாகப் படவில்லை. அவனுக்கு மட்டும் கேட்பதுபோல், சிறப்புப் பேச்சாளருக்குக் கேட்காதவாறு ”அவனைப் பார்த்து கொடைக்கானல் ரொம்ப பிடிக்கும்’டா” என்றேன். அவனுக்கு என்னைவிட சிறப்புப் பேச்சாளர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அவரை ஒன்றும் சொல்ல முடியாதே … அதனால் அவன் என் பக்கம் திரும்பிட்டான்.

அடுத்த நாள் காலை. காலையுணவு நேரம். Buffet. தட்டில் உணவையெடுத்து வந்து கொண்டிருந்தேன். சிறப்புப் பேச்சாளர் எங்கள் கல்லூரி முதல்வரோடு நின்றுகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வருவதைப் பார்த்ததும் முதல்வரிடமிருந்து சிறிது விலகி நின்று என்னைப் பார்த்து சிரித்து அழைத்தார். பக்கத்தில் வந்தேன். இடது கையிலிருந்த உணவுத் தட்டை வலது கைக்கு மாற்றிவிட்டு, இடதுகையை என் தோள் மேல் போட்டு அணைத்துக் கொண்டார். மெல்லிய குரலில், “தம்பி, you have asked a very good question in a very wrong place!"என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு முதல்வர் பக்கம் திரும்பவும் சேர்ந்து கொண்டார்.

ஒரு வேளை இப்போதைய மனநிலையில் அன்று இருந்திருந்தால் இன்னும் அவரிடம் அதிக விளக்கம் கேட்டிருந்திருப்பேன். அப்போது நான் agnostic என்ற நிலைக்குக் கூட வரவில்லை. நிச்சயமாக அந்த விளக்கம் அப்போதே கிடைத்திருக்கலாம்.

கல்லூரி வந்த பிறகு ஸ்டான்லி என்னிடம் கொஞ்ச நாள் மட்டும் மூஞ்சைத் தூக்கிக் கொண்டிருந்தான். சில நாட்கள் மட்டும். அதன்பின் ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டான். அன்றைக்கு நான் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருப்பதாக நினைக்கின்றேன்.

அவனுக்கு இந்தக் கட்டுரையின் தொடுப்பை அனுப்ப வேண்டும். அதோடு,  https://sixth-finger.blogspot.com/2020/09/66-is-jesus-god-no-so-say-biblical.html - இதையும் அனுப்பணும். என்ன சொல்லி திட்டுவானோ தெரியவில்லை !!

 


1111. REVIEW ON GUNA

1112. A RELIGIOUS TURNING POINT

$
0
0


*

  

 

Almost all religions , especially the organized religions, had been and are still holding strongly the view of Creationism.  Even after one and a half centuries after Darwinism still people rush madly to the justice system to stop teaching Evolution in schools. However, probably after learning lessons from the bitter experience with Galileo, Christian religion is trying to wriggle out from Darwinian onslaught.  The catholic Church has almost accepted or at least not objected to evolutionary concepts. Some earlier popes like Pope Pius XII (1950) and Pope John Paul II  (1996) tried to give space for the theory of evolution. But Pope Francis publically announced that evolution is compatible with church teachings. But Islamic religion is still trying to hold on to creation theory as such. Evolution is an anathema to them.

 

Mutation,which is the raw material for evolution is a proved scientific fact. But believers question that. At the same time, they are ready to believe that one of the ribs of Adam is enough to make Eve! It is also quite interesting to find evangelists very boldly giving messages that all males have one rib less, since it was plucked out to make Eve. I have personally found even biology teachers and physiotherapists fully believing one-rib-less-man! So strong are the THE  words! But in the words of Genesis I have my own questions.

Genesis 2:18  -- The Lord God said, “It is not good for the man to be alone. I will make a helper suitable for him.”

Genesis  1:27  --  So God created mankind in his own image, in the image of God he created them; male and female he created them.

Genesis 2:21  --  "So the LORD God caused the man to fall into a deep sleep; and while he was sleeping, he took one of the man's ribs and then closed up the place with flesh."

 

Genesis 2:18  So god did not think of creating man and woman; he made man; then on second thoughts created a "helper" to him!

In Genesis 1:27 god created man and woman in his image. But in Genesis 2:21 creation of man and woman was in a different process! Two versions of Bible give such varied mode of creation.

 

There is no explanation for a few questions like presence of fossils, extinction of some species (dinosaurs), geological strata, mutations and so on. What could be the explanation for some animals becoming extinct? God created and some of them in the course of time became extinct! Didn’t God  know at the time of creation that some of his creations would disappear from this earth at a certain time. Moreover, Christian believers calculate the genealogy of Christ from Adam and say the world is just 6000 years old while the scientists have calculated the age of earth to 4.6 billion years. When the age of fossils have been calculated scientifically by carbon dating believers are never willing to accept even these proved results.

 

Another interesting question is how come the Almighty God should take six days to create all those in the earth. Then a day to rest! There is even a dispute whether that 'sabbath day' was a Saturday and Sunday!! The whole story of creation in the Bible looks more like a kid story, and nothing less. Genesis 2:3 : -- God blessed the seventh day and made it holy, because on it he rested from all the work of creating that he had done. Is god so tired? Is creation such an arduous and hard work for god? Does he need a 'rest day' after six day's work? Looks too humanish!! One another explanation the believers keep giving is 'a day' for us need not be a 24-hour day for god!

 

"…. developments in astronomy and geology had made the genesis story of the seven  days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and Christ's ascension into heaven unacceptable to the modern mind". -- A Common Faith by John Dewey (1859 - 1952)

 

In spite of some hard core believers still sticking to the Biblical story of creation, Christianity as such has very much mellowed down and they try to accept changes in their faith. Unlike in Islam, faith is not a straitjacket in Christianity.  Such  mellowing down has happened in some religious Christian faiths. Let me take just two examples.

 

The first is one of the Sacraments  - confession, among Catholics. When I was a kid we were taught to have weekly confessions. This ritual lasted for long. Even when I was a college student this was practiced by most of the regular church goers. But then there was a great decline. From being a regular Saturday feature it then became a thing for the Christmas festivals like Easter, Christmas etc.. But it has lost its importance and nowadays people have to go for confession only either before their communion or marriage. There ends the matter. What was a weekly feature when I was a kid, has now faded. Confession has become a non-functioning sacrament now.

 

Another feature is the concept on birth-control. Even when I was doing my elementary classes, we were taught in our catechism classes that any mode of birth control was against Christianity. We were taught that coitus was only a procreative act and it has to be so always. Conception should not be wantonly stopped. The Government was then insisting on birth control. I remember in my high school days our catechism teachers used to give a simpe analogy: god has given us two hands - to work for our bread; but only one mouth to feed! It sounded so good then. Only after a few years, it dawned on me that to earn bread with two hands would take two decades while the feeding should start from the first minute after  birth. Of course, these ideas were strictly among catholics. Not sure about Prostestants. I feel that protesstants never openly come out for or against birth control. But Catholics were so serious about it. When I grew up I used to feel that having more number of children was a 'Christian disease'! But these strict ideas and taboos were lost in the course of time. Nowadays Christians finally have understood the positive side of coitus and all restrictions have gone off with the modern wind. I am happy that the 'faith' gave space to the changing social views, without being adamant with some blind ideas and concepts.

 

=============

Ref:

https://www.pewresearch.org/fact-tank/2014/10/30/5-facts-about-evolution-and-religion







*


1113. A TURNING POINT ... 11

$
0
0


*


MYSTERIOUS   PERIOD IN  THE  LIFE  OF  JESUS

*

Nothing is known about most part of Jesus' life. At age of twelve he was missed by his parents during the Passover festival in Jerusalem. They later found him in the temple talking or discussing things with the teachers there. After this age he comes again at the age of 30 to start and continue his religious work or ministry.

Umpteen number of theories about this missed time of his life and also for life "after crucifixion". They are so many and also so much unbelievable. Some of them are as follows:

In the late medieval period, there appeared Arthurian legends that the young Jesus had been in Britain. Arthurian legends hold that Jesus travelled to Britain as a boy, lived at Priddy in the Mendips.

 In the 19th and 20th centuries theories began to emerge that between the ages of 12 and 29 Jesus had visited Kashmir, or had studied with the Essenes in the Judea desert. Modern mainstream Christian scholarship has generally rejected these theories and holds that nothing is known about this time period in the life of Jesus.[

Jesus survived his crucifixion and continued his life, instead of what was stated in the New Testament that he ascended into Heaven with two angels

Jacolliot compared the accounts of the life of Bhagavan Krishna with that of Jesus Christ in the gospels and concluded that it could not have been a coincidence that the two stories have so many similarities in many of the finer details. 

According to the scrolls, Jesus abandoned Jerusalem at the age of 13 and set out towards Sind, “intending to improve and perfect himself in the divine understanding and to studying the laws of the great Buddha”. He crossed Punjab and reached Puri Jagannath where he studied the Vedas under Brahmin priests. He spent six years in Puri and Rajgirh, near Nalanda, the ancient seat of Hindu learning. Then he went to the Himalayas, and spent time in Tibetan monasteries, studying Buddhism, and through Persia, returned to Jerusalem at the age of 29.

Modern mainstream Christian scholarship has generally rejected any travels by Jesus to India, Tibet or surrounding areas as without historical basis:

Evidences of Christ in the Americas are claimed in the Book of Mormon

https://en.wikipedia.org/wiki/Unknown_years_of_Jesus#New_Testament_gap





1114. Dharumi's Page .. Android Kunjappan 5.25

1115. Dharumi's Page - Alagarsamyin Kudirai


1116. கரந்தை ஜெயக்குமாரின் வரிகளில் தருமியாகிய நான்

$
0
0


*

தருமி

 


     ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 37 ஆண்டுகள், பேசுவதையே தன் வாழ்வின் பணியாய் கொண்டு வாழ்வை நகர்த்தியவர்.

     பேராசிரியர்.

     கல்லூரிப் பேராசிரியர்.

     பணி ஓய்விற்குப் பிறகு, இவரது வாய் பேசு, பேசு என்று இவரை நச்சரிக்கத் தொடங்கியது.

     பேசியே பழக்கப்பட்டவர் அல்லவா.

     பேசாமல் இருக்க முடியவில்லை.

  

   ஆனால் யாரிடம் பேசுவது?

     யோசித்தார்.

     காலை எழுந்தால், இரவு வரும் வரை, நேரம் கூட, கோலூன்றி மெதுவாக, மிக மெதுவாக நகர்வதைப் போன்ற ஓர் உணர்வு, இவர் உள்ளத்தே எழுந்தது.

     என்ன செய்யலாம்?

     யோசித்தார்.

     37 வருடங்கள் பேசியாகிவிட்டது.

     பேசிப் பேசி தொண்டையே வறண்டு போய்விட்டது.

     எனவே, இனி, தன் எழுதுகோலைப் பேச வைத்தால் என்ன? என்று சிந்தித்தார்.

     எதை எழுதுவது?

     கதையா?

     யோசித்து, யோசித்துப் பார்த்தார்.

     கதை எழுதுவதற்கான, கரு, இவரிடம் பிடி கொடுக்காமல் ஓடி ஒளிந்து, கண்ணாமூச்சு  விளையாடியது.

     கற்பனைக்கு பதில், நிஜத்தை எழுதியால் என்ன?

     யோசித்தார்.

     எந்த நிஜத்தை எழுதுவது?

      ஆங்கில நூல்களில், உலாவும், உண்மை முகத்தை, வரலாற்று முகத்தை, தமழுக்குக் கொண்டு வந்தால் என்ன? என்று யோசித்தார்.

     முடிவெடுத்தார்.

     ஓய்வுகால உற்ற துணையாய், மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்தார்.

     இவர், தன் இளமைக் காலத்தில் மட்டமல்ல, பேராசிரியராய் பணியாற்றிய காலத்திலும், நூல்களைத் தேடித் தேடி வாசிப்பதில், சுவாசிப்பதில் இன்பம் கண்டவர்.

     இவரது பேராசிரிய நண்பர்களை இரு பிரிவாய் பிரிக்கலாம்.

     தமிழ் நூல்களை மட்டும் படித்துக் கொண்டு, ஆங்கில நூல்களின் பக்கமே எட்டிக்கூடப் பார்க்காத நண்பர்கள் ஒரு புறம்.

      ஆங்கில நூல்களை மட்டுமே படித்துக் கொண்டு, தமிழா? தமிழில் என்ன இருக்கிறது? என இளக்காரமாய், தமிழின் பக்கமே திரும்பாத நண்பர்கள் மறுபுறம்.

     இவர் மட்டும், தமிழையும், ஆங்கிலத்தையும் மாறி மாறிப் படித்தார்.

     தமிழும், ஆங்கிலமும் கலந்த கலவையாய் உயர்ந்தார்.

     தமிழில் புலமை.

     ஆங்கிலத்தில் வல்லமை.

     எனவே, மொழிபெயர்ப்புக்குள் நுழைந்தார்.

     சோதனை முயற்சியாக, ஆங்கில நூல் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, தமிழுக்கு உருமாற்றிக் கொண்டிருந்தபோதே, அந்நூல், வேறு ஒருவரால், மொழி மாற்றம் செய்யப்பெற்று, அச்சு வாகனம் ஏறி, நூலாய் விற்பனைக்கு வந்துவிட்டதை அறிந்து, முதல் முயற்சியை மூட்டை கட்டி வைத்தார்.

     சில மாதங்கள் கடந்த நிலையில், ஒரு பதிப்பகம் இவரை அழைத்து, ஒரு ஆங்கில நூலை, இவரின் கரங்களில் திணித்தது.

     சிறுமியோ, வயதான கிழவியோ, பெண்ணாகப் பிறந்தவர்கள் அனைவரும், முகத்திரை அணிந்துதான் வெளியே வரவேண்டும்.

     வியாபாரமோ, தொழிலோ செய்யக் கூடாது.

     தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது.

     வேலைக்குச் செல்லும் பெண்கள், வரி செலுத்தியே ஆக வேண்டும்.

      வேலைக்குச் செல்லும் பெண், குழந்தை பெற்றுக் கொண்டாலும், விடுமுறை என்பது கிடையவே கிடையாது.

     நிலமோ, சொத்தோ வாங்க முடியவே முடியாது.

     இதுதான் அன்றைய நைஜீரியப் பெண்களின் நிலை.

     இந்த நைஜீரியாவில், ஒரு பொந்தில் வசித்த, ஒரு பெண், பொங்கி எழுந்து போர்க்களம் புகுந்த, உணர்வுப் பூர்வ கதை இவரைத் தேடி வந்தது.

     அமீனா.

     சற்றும் காரம் குறையாமல், அமீனாவைத் தமிழில் இறக்கி வைத்தார்.

     அமீனா.

     உடனே, இரண்டு விருதுகள் இவரைத் தேடிவந்து கரம் குலுக்கின.

     பிறகென்ன, எழுத்து, எழுத்தே, இவர் முழுநேரப் பணியாய் மாறிப் போனது.

     பேரரசன் அசோகன்

     பற்றியெரியும் பஸ்தர்

     அம்பேத்கரின் உலகம்

     திரு திருமதி ஜின்னா.

     இவையெல்லாம் இவரது மொழிபெயர்ப்பில், முகிழ்த்துள்ள நூல்கள்.

     இவரது நூல் ஒவ்வொன்றும், கதைக் களத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தவை.

     பற்றியெரியும் பஸ்தர்.

     பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதப் புரட்சிக் குழுவினருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும், பழங்குடி மக்களின் சிதறடிக்கப்பட்ட வாழ்வை, அப்பட்டமாய், போட்டு உடைக்கும் நூல்.

     அம்மாநில மக்களின் பெயர்கள், அவர்களின் ஊர்ப் பெயர்கள், அம் மாநில மக்களின் வட்டார மொழி வழக்கு என ஒவ்வொன்றையும் ஆய்ந்து, ஆய்ந்து, தேடித் தேடி அறிந்து, ஓர் உணர்வுக் குவியலாய், பஸ்தரை தமிழில் படைத்திருக்கிறார் இவர்.

     இன்னும் சில நாட்களில், திரு திருமதி ஜின்னாவை தமிழுக்கு அழைத்துவர இருக்கிறார் இவர்.

     ஜின்னாவின் காதல் கதை.

     இந்தியாவையே திடுக்கிட வைத்த காதல் கதை.

     மொழிபெயர்ப்புச் செய்யும் பொழுதே, உணர்ச்சி வசப்பட்டு, தன் முதிர்ந்த வயதையும் மறந்து, பலமுறை அழுதிருக்கிறார் இவர்.

     நம்மையும் கதிகலங்கச் செய்ய, கண் கலங்க வைக்க, விரைவில் வெளிவர இருக்கிறது, இந்தக் காதல் வரலாறு.

     மொழிபெயர்ப்பில் மட்டுமல்ல, உள்ளத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு உரு கொடுத்து, எழுத்தாக்கி, ஏட்டில் இறக்கி வைத்து, நூல்களாக்கியவர் இவர்.

     மதங்களும் சில விவாதங்களும்.

     கடவுள் என்னும் மாயை. 

இவர்,

கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன்

என்னும் முழக்கத்துடன்

வலைப் பூ ஒன்றினை நடத்தி வருபவர்.

மதுரை, அமெரிக்கன் கல்லூரியின்

மேனாள் பேராசிரியர்

பேராசிரியர் ஞா.சாம் ஜார்ஜ்.

இவர்தான்,


த ரு மி.

தங்களின் மொழிபெயர்ப்புகள் தொடரட்டும்,

புதுப் புது நூல்கள்

தமிழுக்குக் கிடைக்கட்டும்.


*


1117. Dharumi's Page - INVICTUS - film review

$
0
0



*


https://www.youtube.com/watch?v=17iJgRMIPO8&t=52s 



*



1117. Dharumi's Page - INVICTUS -film review

1118. The JUNKIE - Infotainment short film | Directed by Inr Anbhu

1119. GOSPELS

$
0
0




*

                                         GOSPELS


­­­­­­­­­­­­

The word "gospel" is derived from the Anglo-Saxon term god-spell, meaning “good story,” etymologically from Latin evangelium and the Greek euangelion, meaning “good news” or “good telling.” 

Though it is taught to us that gospels are words of god, evidently, for over a century there has been a broad consensus among scholars that many of the books of the New Testament were not written by the people whose names are attached to them. There is no “original” version of the Bible simply because the Bible is a collection of (certain) books written by different authors, in different ages, sometimes in different languages, from different oral traditions, copied many times, translated in many languages, adapted, edited, …The oldest extant copy of a complete Bible is an early 4th-century parchment book preserved in the Vatican Library, and it is known as the Codex Vaticanus

The  Gospels are filled with discrepancies large and small. There are so many differences among the four Gospels. For instance, in the book of John, Jesus talks about himself and proclaims who he is, saying "I am the bread of life." Whereas in Mark, Jesus teaches principally about the coming kingdom and hardly ever mentions himself directly. If the historical Jesus actually went around saying that he was God, it's very hard to believe that Matthew, Mark and Luke left out that part . These gospels are known to us with the names of Matthew, Mark, Luke, and John because they were traditionally thought to have been written by Matthew, a disciple who was a tax collector; John, the "Beloved Disciple" mentioned in the Fourth Gospel; Mark, the secretary of the disciple Peter; and Luke, the traveling companion of Paul. But truly they are not the original authors of the books. All four authors were anonymous (the modern names were added in the 2nd century), almost certainly none was an eyewitness to the life of Jesus, and all are the end-products of long oral and written transmission The original manuscripts of the New Testament books are not known to have survived. What we get  are just copies made centuries after the originals from other copies rather than from the autograph. So we have only copies of copies of copies….

Gospels are a genre of Early Christian literature claiming to recount the life of Jesus. The four canonical gospels were probably written between CE 66 and 110. Mark was the first to be written, using a variety of sources; the authors of Matthew and Luke, acting independently, used Mark for their narrative of Jesus's career.  Prior to the New Testament which tells the story of the life of Jesus and the early days of Christianity, came the letters or Epistles of Paul.  They were 27 books, all originally written in Greek, with Paul's efforts to spread teaching of Jesus. Each gospel has its own distinctive understanding of Jesus.  Mark never calls him "God", Luke follows Mark's plot more faithfully than does Matthew but expands on him while eliminating some passages entirely, and John, the most overtly theological, is the first to make Christological judgements outside the context of the narrative of Jesus's life.Their differences of detail are irreconcilable.The contradictions and discrepancies between the first three and John make it impossible to accept both traditions as equally reliable.

The New Testament has been preserved in more manuscripts than any other ancient work of literature, with over 5,800 complete or fragmented Greek manuscripts catalogued, 10,000 Latin manuscripts and 9,300 manuscripts in various other ancient languages including SyriacSlavicGothicEthiopicCoptic and Armenian. Though the New Testament has four canonical gospels, which are accepted as the only authentic ones by the great majority of Christians, but many others exist, or used to exist, and are called either New Testament apocrypha or pseudepigrapha. Some of these have left considerable traces on Christian traditions, including iconography.

 

One of the great elders of early period Irenaeus of Lyons stated that there must be four gospels and only four because there were four corners of the Earth and thus the Church should have four pillars. But number of gospels is so huge.

Classification of gospels:

1. Canonical gospels - the 4 gospels of Matthew, Mark, Luke and John

2. Gnostic gospels

3.Jewish-Christian gospels

4. Infancy gospels

5.Other gospels

6. Partially preserved gospels

7. Fragmentary preserved gospels

8. Reconstructed gospels

9. Lost gospels

10. ragments of possibly unknown or lost (or existing) gospels[

11. Medieval gospels

12. Modern gospels

 

Of the above gospels, the Gnostic gospels get a significant role in a historical perspective. It was one of the scrolls found in dead sea, called the Dead Sea Scrolls or  Qumran Caves Scrolls.  They  are ancient Jewish religious manuscripts found in the Qumran Caves in the Judaean Desert, near Ein Feshkha on the northern shore of the Dead Sea.    Dead Sea Scrolls, ancient, mostly Hebrew, manuscripts (of leather, papyrus, and copper) were first found in 1947.  Thirteen leather-bound papyrus codices buried in a sealed jar were found by a local farmer named Muhammed al-Samman.  The writings in these codices comprise 52 mostly Gnostic treatises, but they also include three works belonging to the Corpus Hermeticum and a partial translation/alteration of Plato's Republic. The Dead Sea Scrolls contain nothing about Jesus or the early Christians, but indirectly they help to understand the Jewish world in which Jesus lived and why his message drew followers and opponents

The contents of the codices were written in the Coptic language. The best-known of these works is probably the Gospel of Thomas. It is dated to the second century by most interpreters, but based on much earlier sources. The buried manuscripts date from the 3rd and 4th centuries. The biblical or canonical Gospels, in presenting the story of Jesus, proclaimed that in Jesus, God had manifested and launched his kingdom on Earth (as it was in heaven). In a contrary way, the Gnostic Gospels rejected this idea of the kingdom of God at work on Earth in Jesus. Some important Gnostic gospels are the Gospel of Thomas, the Gospel of Peter, the Gospel of Judas, the Gospel of Maryinfancy gospels such as the Gospel of James (the first to introduce the perpetual virginity of Mary.

Almost all of the Dead Sea Scrolls collection is currently under the ownership of the copies of copies of Government of the state of Israel, and housed in the Shrine of the Bookon the grounds of the Israel Museum.

 

============

https://www.biblica.com/resources/bible-faqs/is-the-bible-we-have-today-in-english-the-same-as-the-original-bible/ 

https://www.history.com/topics/religion/bible 

https://www.npr.org/templates/story/story.php?storyId=124572693 

https://en.wikipedia.org/wiki/Gospel 

https://www.compellingtruth.org/gnostic-gospels.html 

http://gnosis.org/naghamm/gop.html 

https://www.google.com/search?rlz=1C1CHBD_enIN919IN919&sxsrf=ALeKk01srnnnmz2-7Z7OStWTNja5vg76-g%3A1602132300228&ei=TJl-

X9u_DbPgz7sPutG48Ao&q=is+the+copy+of+original+bible+available%3F&oq=is&gs_lcp=CgZwc3ktYWIQARgAMgQIIxAnMgQIIxAnMgsIABCxAxCDARDJAzIKCC4QsQMQgwEQQzIECAAQQzIICAAQsQMQgwEyBAgAEEMyDQguELEDEMcBEKMCEEMyAggAMgIIADoHCCMQyQMQJzoICC4QsQMQgwE6CggAELEDEIMBEENQzCdY9ClgkV1oAHABeACAAZYBiAGPApIBAzAuMpgBAKABAaoBB2d3cy13aXrAAQE&sclient=psy-ab 

https://www.google.com/search?rlz=1C1CHBD_enIN919IN919&sxsrf=ALeKk00Oxtwb7A-ua-VMNQ9YZaZ1wwJCxQ%3A1602134127702&ei=b6B-X9ysKqLaz7sP272igAo&q=how+was+the+bible+compiled&oq=how+&gs_lcp=CgZwc3ktYWIQARgFMgQIIxAnMgQIIxAnMgQIIxAnMgcIABDJAxBDMgQIABBDMgUIABCRAjIECAAQQzICCAAyAgguMgUIABCxAzoICAAQsQMQgwE6CAguEMcBEKMCOgsILhCxAxDHARCjAlDU_i1Yw4ouYOPRLmgAcAF4AYAB_ASIAakLkgEHMi0zLjUtMZgBAKABAaoBB2d3cy13aXrAAQE&sclient=psy-ab

 

 

 

 

 

 



*


Viewing all 777 articles
Browse latest View live